ஹீரோவாக மாறிய குரங்கு.வீடியோ
22 Dec,2014
இந்தியாவில் உத்திர பிரதேச மாநிலம் கான்பூர் ரெயில் நிலையத்தில் சுற்றி திரிந்து கொண்டு இருந்த குரங்குகளில் ஒன்று மினசார ரெயிலுக்காக செல்லும் எலக்ட்ரிக் வயரில் கை வைத்தது.
இதனால் மினசாரம் தாக்கி குரங்கு ரெயில் பிளாட்பாரத்திற்கு இடையில் தூக்கி வீசபட்டது. இதில் அந்த குரங்கு மயங்கிய நிலையில் கிடந்தது. உடன் இருந்த ஒரு குரங்கு 20 நிமிடம் போராடி அந்த குரங்கை காப்பாற்றியது.
மயங்கிய நிலையில் இருந்த குரங்கை கடித்து மற்றும் அடித்து சுயநினைவு வர முயற்சி செய்தது. பின்னர் அருகில் ஓடிய கால்வாய் தன்ணீரில் குரங்கை தள்ளி விட்டது.
இதில் மயங்கிய குரங்குக்கு சுய நினைவு திரும்ப வந்தது. இந்த காட்சியை அங்கு கூடிய நின்றவர் ஏராளமான பேர் தங்கள் செல்போனில் படம் பிடித்தனர். இந்த நிகழ்ச்சி அனைஅவருடைய மனதையும் கலக்கியது.