நன்றி சொல்வதில் என்ன பயன்? – இதைப்படிங்க ப்ளீஸ்!

03 Nov,2014
 

             



‘நன்றி’ சொல்லிப் பழக வேண்டும். நன்றி சொல்வது ஒரு நல்ல பழக்கம் என்று இதுவரை நமக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதன் பயன் இத்துடன் நின்றுவிடுவதில்லை என்கின்றனர் உளவியல் அறிஞர்கள் – இதனால் உறவுகள் பலப்படுகின்றன என்கின்றனர்.

இது வட கரோலினா பல்கலைக்ககழக உளவியல் அறிஞர், சாரா அல்கோ வெளியிட்ட find-remind-and-bind (கண்டுபிடி-நியாபகப்படுத்து-சேர்) கோட்பாட்டை அடித்தளமாகக் கொண்டது. இந்தக் கோட்பாட்டின் படி நன்றி உணர்வுடன் செயல்படுவது பின்வரும் நடவடிக்கைகளுக்கு வித்திடும்.
•புதிய சமூக உறவுகளை உருவாக்குகின்றது. (கண்டுபிடித்தல்)
•ஏற்கனவே இருக்கும் உறவினர்களுடனான உறவை மேம்படுத்துகின்றது. (நியாபகப்படுத்து)
•இந்த உறவுகளை பராமரிக்கவும், பிற்கால பயன்களுக்கும் உதவுகின்றது. (சேர்க்கை)

மற்ற உணர்வுகளைப் போலவே, நன்றியுணர்வை, உணரவும் காட்டவும் முடியும். உறுவுகளை உருவாக்கி, பலப்படுத்துவதில் நன்றியுணர்வு ஆற்றும் பணி மிகவும் வலிமையானது. ஒரு உறவில் இரண்டு நபர்களிடம், நன்றியுணர்வால் நம்பிக்கை, உதவி மனப்பான்மை அதிகரித்து, கோப உணர்வை குறைக்கின்றது. இது போன்ற பல நன்மைகளும் இதனால் உண்டு.

இத்தோடு, இரண்டு காதலர்களுக்கு இடையிலும் உறவை வளர்ப்பதில் நன்றியுணர்வு பெரும் பங்காற்றுகின்றது.


என்ன பயன் நன்றி சொல்வதில்

 

இது போன்ற சமூக உறவுகளுக்கு நன்றியுணர்வின் தேவை மிகவும் அதிகம் என்பதை அறிய ஓரிரு நொடிகளே போதும்.

ஒரு புதியவர் நமக்காக கதவைத் திறக்கும்போதோ, நம் வீட்டு வேலைக்காரர் நம்மிடம் காலை தேநீர் அழிக்கும்போதோ, நாம் நன்றி தெரிவிப்பது அவசியம்.

இப்போது நீங்கள் கேட்க நினைப்பது எனக்குப் புரிகின்றது – அந்நியர்களிடம் இது போன்று நன்றியுணர்வை வெளிப்படுத்துவது, எந்த வகையில் புது உறவை பலப்படுத்த உதவுகின்றது? மற்றவர்கள் நன்றி சொல்லும்போது அவர்களின் மீதான நம்பிக்கை அதிகமாகின்றாதா?

நன்ற சொல்வதால் சமூக உறவில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும், அதன் பயன்கள் குறித்தும் நானும், வாஷிங்க்டன் கான்ஜாகா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த எனது தோழி மோனிகா ஒய் பார்ட்லெட்டும் ஓர் ஆய்வு செய்து அதை இந்த மாத எமோஷன் (Emotion) பத்திரிக்கையிலும் வெளியிட்டுள்ளோம்.

இந்த ஆய்விற்காக நாங்கள் ஆய்வகத்தில் நன்றியுணர்வை சரியாக கண்காணிக்கவும், அதை சரியான வகையில் வெளிப்படுத்தும் வகையில் ஒரு சூழலை உருவாக்கவும் முயன்றோம். இதற்காக எங்கள் பல்கலைக்கழகத்தால் நடத்தப்படுவது போன்று ஒரு வழிகாட்டுதல் திட்டத்தை உருவாக்கி, அதில் 70 இளங்கலை மாணவர்களைப் பங்கு கொள்ளச் செய்தோம்.

இந்தத் திட்டத்தின் சாராம்சம் – அருகிலிருக்கும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்தில் சேர உதவியாக கட்டுரை எடுத்துக்காட்டுகளை உருவாக்கி, அவர்களுக்கு ஆலோசனை வழங்குவதாகும்.

இதன் மூலம் நன்றியுணர்வின் முதல் பகுதியான, மற்றவர்களுக்கு உதவி செய்தலைக் கண்காணிக்க திட்டம் உருவாக்கினோம்.

ஒரு வாரம் கழித்து, இந்த மாணவர்களை மறுபடியும் ஆய்வத்திற்கு அழைத்து வந்தோம். இவர்கள் அனைவருக்கும் அந்தப் பள்ளி மாணவர்கள் அனுப்பிய கடிதத்தை அவர்களிடம் அளித்தோம். அதில் ஏறக்குறைய பாதிப் பேர் அனுப்பிய கடிதத்தில் – ஆலோசனையை ஏற்றுக் கொண்டதாக குறிப்பு மட்டுமே இருந்தது.

இந்தத் திட்டத்தின் மூலம் நீங்கள் அனுப்பிய ஆலோசனை எனக்குக் கிடைத்தது, அதை நான் எனது விண்ணப்பத்தில் பயன்படுத்துவேன்,

இதற்குப் பிறகு நன்றியுணர்வை வெளிப்படுத்தும் கடிதங்கள். இது மற்ற ஐம்பது சதவிகிதம் பேருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் இருந்தது. இந்தக் குறிப்பில் நன்றி சொல்லப்பட்டு இருந்தது.

எனக்காக நேரம் ஒதுக்கி, இந்த ஆலோசனைகளை எழுதி அனுப்பியதற்கு மிக்க நன்றி.

அனைத்து மாணவர்களுக்கும் இந்தக் கடிதங்கள் வழங்கப்பட்டது. இதில் இருந்த உள்ளடக்கம் மட்டுமே வேறு.

இதற்குப் பிறகு அவர்கள் உதவி செய்த மாணவர்களைக் குறித்து அவர்கள் நினைப்பது என்னவென்று கேட்கப்பட்டது. அவர்கள் அதைக் குறிப்பில் எழுதியபின் இந்த ஆய்வு முடிந்ததாகக் கூறி, அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஆனால் அது உண்மையல்ல. இதற்குப் பிறகு ஆராய்ச்சியாளர்கள் சாதாரணமாக, இந்த நிகழ்ச்சியின் அமைப்பாளர்கள் குறிப்பு அட்டையை விட்டுச் சென்றுள்ளதாகவும், அவர்கள் விரும்பினால் அதை பூர்த்தி செய்து வைக்கலாம் என்றும், அந்த மாணவன் கல்லூரியில் சேர்ந்த பிறகு இந்தக் குறிப்பு அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இத்துடன் இந்தக் குறிப்பை எழுவது முற்றிலும் அவர்களுடைய விருப்பம் என்று தெளிவாகக் கூறப்பட்டது. இதற்குப் பிறகு அவர்கள் அந்த அறையில் தனித்து விடப்பட்டார்கள்.

இந்தக் குறிப்பு எழுதும் வாய்ப்பு அவர்களுடைய உறவை அளவிடும் அளவுகோலாக எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் கலந்து கொண்ட மாணவர்கள் தாங்கள் உதவிய மாணவர்களுடன் உறவை வளர்த்துக் கொள்ள விரும்புவார்களா? இது மாணவர்கள் காட்டிய நன்றியுணர்வைச் சார்ந்து இருக்குமா?

நன்றியுணர்வு எந்த அளவிற்கு வேலை செய்தது?

எதிர்பார்த்தது போலவே அவர்களுள் மூன்று மாணவர்களைத் தவிர அனைவரும் பதில் குறிப்பு எழுதி இருந்தனர். (கல்லூரி மாணவர்கள் ஆட்டு மந்தையைப் போல என்பது நாம் அறிந்ததே). நம் ஆய்வை உறுதி செய்யும்படி அந்த மூன்று மாணவர்களும் கட்டுப்பாட்டுடன் எழுதப்பட்ட முதல் குழுவைச் சேர்ந்தவர்கள்.

முதல் கோட்பாட்டைத் தெளிவாக அறிந்து கொள்ள எதுவாக, நாங்கள் அந்த மாணவர்களின் பதில் குறிப்புகளை ஆய்வு செய்தோம். அதில் ஒரு முக்கியாமான தகவல் கிடைத்தது.

நன்றியுணர்வுடன் எழுதப்பட்ட கடிதத்தைப் பெற்ற மாணவர்களில் 68 சதவிகிதம் பேர், அந்தக் குறிப்பில் தங்கள் தொடர்பு விவரத்தை உள்ளிட்டு இருந்தனர். ஆனால் இது இல்லாமல் எழுதப்பட்ட இரண்டாம் குழுவில் 42 சதவிகிதம் பேர் மட்டுமே தங்கள் தகவல்களை உள்ளிட்டு இருந்தனர். இரண்டு குழுவிற்கும் இடையே பெரிதாக வித்தியாசம் ஒன்றும் இல்லை.

இதற்கான காரணத்தையும் விளக்கத்தையும் அறிய முயன்றோம். தங்களிடம் உதவி பெற்ற மாணவர்களைக் குறித்து, கல்லூரி மாணவர்களின் அபிப்பிராயத்தை அறிய முயன்றோம். இதை இரண்டு அளவீட்டில் குறிக்க அறிவுறுத்தினோம் – இனம்புரியாத நட்பு (அன்பு, நம்பகத் தன்மை) மற்றும் அறிவு (புத்திசாலித்தனம்)

நாம் எதிர்பார்த்ததைப் போலவே, நன்றியுணர்வுடன் எழுதப்பட்ட கடிதத்தைப் பெற்றவர்களிடம் நட்புணர்வு அதிகமாக இருந்தது. இதனால் அவர்கள் தங்கள் தொடர்புகளைக் கடிதத்தில் பகிர்ந்து கொள்ளத் தயங்கவில்லை.

ஆராய்ச்சி முடிவுகள்

“நன்றி” சொல்வது நல்ல பழக்கம் மட்டுமல்ல. இதை விட, ஒரு சமூக உறவை உருவாக்க, ஒரு முக்கியமான தேவையாக கருதப்படுவது நன்றியுணர்வே ஆகும். இது உங்கள் நட்பு வட்டாரத்தில் உங்களுக்கு ஒரு நல்ல பெயரையும் பிடிப்பையும் உருவாக்கும்.

இதற்கு ஒரு படி மேலே பொய், சமூக வலைத்தளங்களில் வலம் வரும் நன்றியுணர்வு சவால்கள் (7, 10, 21,100 மற்றும் 365 நாட்கள்) சவால்களில் பலன் அதிகமாக இருக்கலாம்.

இதில் தாங்கள் நன்றிக் கடன் பட்டவர்களுடைய புகைப்படங்களை தினமும் ஒரு நபர் தனது முகநூல், இன்ஸ்டாக்ரேம், வலைப்பதிவுப் பக்கம், ட்விட்டர் உள்ளிட்ட சமூகத் தளங்களில் பகிர்ந்து கொள்ள வேண்டும். முக்கியமாக பொதுப் பக்கங்களில்.

இது நிச்சயமாக மனிதர்களுக்குள் (நண்பர்கள், காதலர்கள், குடும்ப அங்கத்தினர்கள்) ஆகியோர் இடையே ஒரு உறவை எற்படுத்துகின்றது என்பது உண்மை. இது நமக்கு முற்றிலும் புதியவர்களிடம் பழகும்போதும் பொருந்தும்.

இதில் இன்னும் ஆய்வுகள் மேற்கொள்ளப் பட இருக்கின்றன. ஆனால் மறந்து விடாதீர்கள். உங்களுக்கு யாரேனும் உதவி செய்யும்போதோ, இடம் விடும்போதோ நன்றி சொல்லத் தொடங்குங்கள்.



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies