மனைவியின் இடைவிடாத செக்ஸ் தொல்லையால் கணவர் விவாகரத்து
02 Sep,2014
மனைவியின் செக்ஸ் தொல்லையால் பாதிக்கப்பட்ட கணவருக்கு விவாகரத்து வழங்கி மும்பை குடும்பநல நீதிமன்றம் உத்தரவிட்டது.
மும்பையை சேர்ந்தவர்கள் கிருஷ்ணன் - யமுனா தம்பதியர் (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). இவர்களுக்கு கடந்த 2012ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடந்தது.
சிறிது காலமே யமுனாவுடன் வாழ்ந்த நிலையில், அவரது செக்ஸ் தொல்லை காரணமாக கிருஷ்ணன் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார். மனைவியிடமிருந்து விவாகரத்து வழங்க வேண்டும் என கோரி, மும்பை முதன்மை குடும்ப நல நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடுத்தார்.
வழக்கில் கூறியிருந்ததாவது:-
திருமணமான நாள் முதல் என் மனைவி எனக்கு செக்ஸ் தொல்லை கொடுத்து வந்தார். அவள் அளவு கடந்த செக்ஸ் ஆசை கொண்டிருந்தார். பிடிவாத குணம் கொண்டு, மூர்க்கத்தனமாகவும், சர்வாதிகாரி போலவும் நடந்து கொண்டார். காரணமே இல்லாமல் என்னுடன் சண்டை போட்டு வந்தார்.