கேன்ஸர் தாக்கத்தை தடுக்கும் ஆஸ்பிரின்: ஆய்வில் தகவல்
07 Aug,2014
நடுத்தர வயதுடையவர்கள், நாளொன்றுக்கு ஒரு வில்லை வீதம் 10 வருடங்களுக்கு ஆஸ்பிரின் மாத்திரையை உள்ளெடுத்து வந்தால் உயிரிழப்பை தடுக்க முடியும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குடல், தொண்டை, வயிறு என்பவற்றில் ஏற்படும் கேன்ஸரிலிருந்து பாதுகாப்பு அளிக்கும் இந்த மாத்திரை, சில இருதய நோய்களிலிருந்தும் பாதுகாப்பு தரக்கூடியது எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
எனினும் ஆஸ்பிரின் மாத்திரை உட்கொள்வதன் மூலம் இரத்தப்போக்கு, புண்கள் ஏற்படும் என முன்னர் ஓர் ஆய்வு தெரிவித்திருந்த நிலையிலேயே இப்புதிய தகவல் வெளியாகியுள்ளது.