கென்யாவுக்கு சுற்றுலா சென்ற பெண் சுட்டுக் கொல்லப்பட்ட பரிதாபம்.
28 Jul,2014
ஜேர்மனி சுற்றுலாப் பயணி கென்யாவில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஜேர்மனியை சேர்ந்த் பெண்மனி ஒருவர் கென்யாவின் கடலோர பகுதியான மொம்பாசாவில் சுட்டுக் கொலை செய்யபட்டுள்ளார்.
இந்த கொலைக்கு இதுவரை எவரும் பொறுப்பு எற்கவில்லை என்றாலும், கென்யா தற்போது சோமாலிய அல்கெய்தா தீவிரவாதிகளால் தாக்கப்பட்டு வருவதால் அவர்கள் தான் செய்திருப்பார்கள் என அஞ்சப்படுகிறது.
இந்த கொலை கடந்த யூலை 6 ம் திகதி ரஷ்ய பெண்மணி சுட்டுக்கொலை செய்யப்பட்ட அதே இடத்தில் தான் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.