சாகும் நிலையில் வாழத் துடிக்கும் முன்னால் போராளி! உதவுமா தமிழினம்ஸ( காணொளி இணைப்பு)
28 Jul,2014
நான் வறுமையில் சாகும் நிலையில் உள்ளேன்; கழுத்திற்கு கீழ் உணர்வற்று இருக்கும் முன்னாள் போராளிக்கு நேரடியாக உதவ முன்வாருங்கள் பூநகரியில் வனாந்திரத்தில் தனது வாழ்வை மீட்கப் போராடும் முன்னால் போராளி யூட்யெசீலன். யுத்தத்தின் கோர தாண்டவத்தினால் பாதிக்கப்பட்டு கழுத்தின் கீழ் உள்ள பாகங்கள் அனைத்தும் இயங்க முடியாத நிலையில் படுக்கையில் உயிர்வாழப் போராடும் அவல நிலை.
ஏ.சி அறையில் இருக்க வேண்டிய நிலையில் சிறு கொட்டகையில் வெப்பத்தின் சூட்டினைத் தாங்கமுடியாது நீரில் நனைத்து துணியினை உடலில் போட்டு உதவிக்கு எவரும் இன்றி பாடசாலை செல்லும் மாணவனின் தயவில் தனது வாழ்வை நடாத்தும் நிலமை.
உதவும் நல்ல உள்ளம் கொண்டோரே நேரடியாக தொடர்புகளை ஏற்படுத்தி உயிர்வாழ உதவி புரியுங்கள்.
தொலைபேசி இலக்கம்; 0770059430
வங்கி கணக்கு இலக்கம்; அரியதாஸ் அகலியா
75209453
இலங்கை வங்கி
இது தொடர்பில் வகை தொகை அற்று பல சம்பவங்கள் வெகு விரைவில் எமது இணையத்தளத்தில் பார்த்து உதவலாம் தெரிவிப்பது நாங்கள் தீர்மானிப்பது நீங்கள்
இந்த போராளியா எந்தப் போராளியானாலும் கருத்தக்களுக்கான பகிர்வு
இன்று எத்தனை போராளிகள் வாழ்க்கை வீதியிலும் கட்டிலிலும் நடப்பு நாட்களில் புலம் பெயர்ந்த மண் என ஒன்று உருவாகியுள்ளது என்றால் எம்மில் யார் காரணம் எம் தாய் மண் மீட்க போராடிய போரளிகள் என்றால் இன்று பலர் கூறுவர் இல்லை என்று தான், காரணம் ஒரு நாட்டின் குடியுரிமை கிடைக்கும் வரைக்கும் மாத்தளன், முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு, வதிவிடம் கிடைத்து விட்டால் எனக்கும் அதற்கும் தொடர்பில்லை இன்று எம்மில் எத்தனை நபர்கள், போரளிகள் படங்களை காட்டி குடியுரிமை பெற்றவர்கள். அப்படியான சூழல் உண்மை என்றால் இன்று நாம் தாயாரா இவர்களைப் பார்க்க! பலரின் பதில் மௌனம்! சிலர் பல உதவிகளை செய்கிறார்கள்.
உருவமற்ற கோயில்களுக்கு எத்தனை ஆயிரம் பணம் இறைக்கும் நாங்கள், ஏன் எமக்காக தம் வாழ்வை தொலைத்து வாழும் வயதில் அவஸ்தைப்படும் யாரையும் பற்றி நாம் என்றும் சிந்தித்ததுன்டா? வெளிநாடு வரும் வழியில் எத்தனை வெற்று வார்த்தைகள், அவருக்கு உதவனும் இவரைப் பார்க்கனும் என்று வந்தால் என்ன ஒன்றும் இல்லை, காரணம் விலை வாசி பிள்ளை படிச்சு நாட்டைப் பார்க்கும் என்ன நிலமை யாரிடம் தமிழரின் நிலமையை முறையிடுவது, இது சிறு குறிப்பு முடிந்தால் படியுங்கள் இயலுமானால் உதவுங்கள்.