பாரீஸ் மாநகரில் உயிர்வரை இனித்தாய் திரையிடப்படுகிறது
14 Jul,2014
..
உலகின் பல பாகங்களில் இருந்தும் கலைஞர் வெள்ளத்துடன்..
Publicis Cinemas, 133. Avenue Des Champs Elysees, 7500 Paris.
Uyirvarai Iniththaai movie screening in Franceஸ by mithila_selvadurai
டென்மார்க்கில் தயாரான உயிர்வரை இனித்தாய் திரைப்படம் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் அமோக வெற்றி பெற்றுள்ளது.
புலம் பெயர் தமிழரின் வர்த்தக சினிமா முயற்சியில் ஒரு முக்கியமான காலடி என்ற தெளிவான கருத்தை படத்தைப் பார்த்த ரசிகர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இவர்களின் உண்மையான பிரச்சாரத்தன்மையற்ற கருத்துக்கள் ஒளிக்காட்சிகளாக உடனுக்குடன் வெளிவந்துள்ளன.
அந்த வகையில் இப்படம் இம்மாதம் பிற்பகுதியில் தனது சர்வதேச பிரயாணத்தை ஆரம்பிக்கிறது, பிரான்சின் தலைநகர் பாரீஸ்சில் எதிர்வரும் 27.07.2014 அன்று மாலை 17.30 மணிக்கு பிரான்சிய கலைஞர்களின் ஏகோபித்த ஆதரவுடன் தடம் அமைப்பினால் திரையிடப்படுகிறது.
பிரான்ஸ் வாழ் தமிழ் மக்களின் உன்னதமான கலைஞர்களான தம்பிஐயா தயாநிதி, இரா. குணபாலன் போன்றோர் முக்கிய பாத்திரத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
பிரான்சில் பல பரிசுகளை வென்ற கலைஞன் டெசூபன் கமேராமேனாக பணியாற்றியுள்ளார்.
திரைத்துறைக்கு ஆக்கமும், ஊக்கமும் கொடுக்கும் பிரான்சில் உள்ள அத்தனை அமைப்புக்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.
அனைவரும் ஒருவருக்கு ஒருவர் தகவலை பரிமாறி அன்றைய நாளுக்கு புது வலு சேர்க்க வேண்டுமென இயக்குநர் கே.எஸ். துரை கேட்டுள்ளார்.
பிரான்சைத் தொடர்ந்து சுவிஸ், பிரிட்டன், கனடா, ஜேர்மனி என்று பயணங்கள் தொடரும்ஸ