போதையில் கிரேனில் ஏறிய பெருங்குடி மகன்
29 Jun,2014
டென்மார்க் ஓகூஸ் நகரத்தின் மத்தியில் கட்டிட வேலைகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கிரேனின் மீது தவழ்ந்து ஏறினார் ஒரு வார விடுமுறைக் குடிகாரர்.
தடதடவென ஏறி கிரேனின் உச்சிவரை சென்ற இவரை உயிருடன் மீட்பது பெரும் போராட்டமாகிவிட்டது.
இவரைச் சுற்றி பாதுகாப்பு ஊழியர்கள் நின்று அரணமைக்க, கிரேன் கீழே இறக்கப்பட்டு இவர் உயிருடன் காப்பாற்றப்பட்டார்.
இவரைக் காப்பாற்றுவதற்காக தாம் இழந்த தேவையற்ற நேரத்திற்காக 6000 முதல் 7000 குறோணர் வழங்கப்பட வேண்டுமென பல்க் பிரிவு கேட்டுள்ளது.
மறுபுறம்..
கிறிஸ்ரீனியா பகுதியில் 700 கிலோ கஞ்சாவை விற்ற குற்றத்திற்காக 38 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வியாழன் மேலூவ் நகரத்தில் சுமார் 50 கிலோ எடையுள்ள ஆம்பிரமின் போதை வஸ்த்துடன் 34 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வடக்கு வெளிச்சம் என்று குறியீட்டு பெயரிட்டு போதைவஸ்த்துக்கு எதிராக போலீசார் நடத்தும் தேடுதல் வேட்டையில் இதுவரை 80 பேர் கைதாகியுள்ளனர்.
இன்னொரு செய்தியின்படிஸ
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஸ்பானியாவில் வீடொன்றின் வாசலில் கழுத்துத் திருகி கொல்லப்பட்ட டேனிஸ் இளம் யுவதி அனா ஸ்ரீனா யென்சனின் கொலை வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
இவருடைய கொலையில் சந்தேகத்திற்குரிய 30 வயதுடைய பெல்ஜியம் நாட்டவரை ஸ்பானியப் போலீஸ் கைது செய்துள்ளது, இவர் நான்கு வாரங்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
tks.s.durai