கைப்பையை சோதனை செய்த காவல்துறை அதிகாரியை பின்பக்கமாக வந்து சுட்டுக்கொன்ற மர்ம மனிதன். அதிர்ச்சி வீடியோ
25 Jun,2014
ரஷ்யாவில் உள்ள Chechnya என்ற பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரி ஒருவரை மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு எவ்வித ஆர்ப்பாட்டமும் இன்றி சென்ற வீடியோ ஒன்றை அந்நாட்டு அரசு வெளியிட்டு குற்றவாளியை பிடிக்க உதவுமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
Chechnya பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தின் முக்கிய பகுதியில் காவல்காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரி ஒருவர் அவ்வழியே வந்த ஒருவரை சோதனை செய்யவேண்டும் என்று கூறினார். வந்தவரும் சோதனைக்கு உடன்படுவதாக கூறி தன்னுடைய கைப்பையை அவரிடம் கொடுத்து சோதனை செய்யுமாறு கேட்டுக்கொண்டார். காவல்துறை அதிகாரி அவருடைய கைப்பையை சோதனை செய்துகொண்டிருக்கும்போது, நைசாக அதிகாரியின் பின்னால் வந்த அந்த மர்ம மனிதன், தன்னுடைய இடுப்பில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து காவல்துறை அதிகாரியின் தலையில் சுட்டுக்கொன்றுவிட்டு, எவ்வித ஆர்ப்பாட்டமும் இன்றி அமைதியாக தன்னுடைய கைப்பையை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டான். செல்லும்போது காவல்துறை அதிகாரியின் ஐ.டி.கார்டையும் எடுத்துக்கொண்டு சென்றுவிட்டதாக தெரிகிறது.
இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட Chechnya காவல்துறை அதிர்ச்சி அடைந்துள்ளது. கைப்பையில் போதைமருந்தை அந்த மர்ம நபர் கடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சிசிடிவி கேமராவில் பதிவான இந்த சம்பவத்தின் காட்சிகளை இணையத்தில் பதிவு செய்த ரஷ்ய போலீஸார் குற்றவாளியை பிடிக்க உதவுமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.