தாய்லாந்தில் தும்பிக்கை உதவியால் ஓவியங்கள் வரையும் யானைகள். அபூர்வ புகைப்படங்கள் மற்றும் வீடியோ
17 Jun,2014
யானைகளை ஓவியம் வரைந்துதான் நாம் இதுவரை பார்த்திருக்கின்றோம். ஆனால் யானைகளே ஓவியம் வரைவதை இதுவரை யாராவது பார்த்ததுண்டா? இந்த அதிசய சம்பவம் தாய்லாந்தில் நடந்துள்ளது.
தாய்லாந்தில் உள்ள Chiang Mai, என்ற இடத்தில் உள்ள Maesa Elephant Camp என்ற யானைகள் சரணாலயத்தில் ஏழு யானைகள் ஓவியம் வரைவதற்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. யானைகள் தங்கள் தும்பிக்கை உதவியால் பெயிண்டை தெளித்தும், அதற்கென பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட பிரஷ்களில் ஓவியம் வரைந்து சாதனை படைத்து வருகின்றது. ஏதாவது தவறாக வரைந்துவிட்டால் யானைகள் தங்கள் பெரிய காதுகளின் உதவியால் தவறை திருத்திக்கொள்கின்றன. யானைகள் ஓவியங்கள் வரைவதற்காக சிறப்பு பயிற்சியாளர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர். Mr Blaise என்பவர் இந்த பயிற்சிக்குழுவினர்களுக்கு தலைமை தாங்கி நடத்துகிறார். யானைகளுக்கு நாம் ஒரு தடவை செய்துகாட்டினாலே போதும், அதை யானைகள் புரிந்து கொண்டு மிகவும் அழகாக ஓவியங்கள் வரைகின்றன.
சமீபத்தில் தாய்லாந்தில் இந்த யானைகள் வரைந்த ஓவியங்களின் கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெற்றது. தாய்லாந்து மக்கள் மட்டுமின்றி வெளிநாட்டை சேர்ந்தவர்களும் யானைகள் வரைந்த ஓவியங்களை ஏலத்தில் வாங்கிச்சென்றனர். யானைகளின் ஓவியங்கள் மூலம் சேர்க்கப்பட்ட பணம், யானைகளின் நல்வாழ்விற்கான சரணாலயங்களுக்கு நிதியாக வழங்கப்பட்டது.