பள்ளியின் முன் சுய இன்பத்தில் ஈடுபட்ட ஜார்ஜியா நாட்டு வாலிபர் கைது.
ஜார்ஜியா நாட்டில் ஒரு இளைஞர் பள்ளியின் கதவுக்கு முன்னாள் சுய இன்பம் அனுபவைத்துவிட்டு, காண்டம்களை கதவின்மேல் தொங்கவிட்டு சென்ற குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார்.
ஜார்ஜியா நாட்டில் Tarence Wilson என்ற இளைஞர் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நேரத்தில் Wesley Heights Elementary School என்ற பள்ளியின் முன்னாள் உள்ள கதவருகே உட்கார்ந்து சுய இன்பம் அனுபவைத்துள்ளார். அப்போது கதவின் அருகே உள்ள சிசிடிவி கேமராவில் அவருடைய செய்கை வீடியோவாக பதிவாகியுள்ளது. மேலும் அவர் சுய இன்பத்தை முடித்துவிட்டு அவர் உபயோகப்படுத்திய சில காண்டம்களை பள்ளியின் கதவில் தொங்கவிட்டுவிட்டு சென்றுள்ளார்.
காலையில் பள்ளியை திறக்க வந்தவர்கள் அந்த காண்டம்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸார் விரைந்து வந்து சிசிடிவி கேமராவில் பதிவான வீடியோவை பார்த்தபோதுதான் உண்மை தெரிந்தது. அதன்பின்னர் போலீசார் Tarence Wilson என்பவரை கைது செய்து விசாரணை செய்தனர். விசாராணையில், தான் பல வருடங்களாக சுய இன்பம் அனுபவிக்கும் பழக்கம் உள்ளவர் என்றும், தன்னுடைய வீட்டில் தனிமையான நேரம் கிடைக்காததால் அங்கு சுய இன்பம் அனுபவிக்க முடியவில்லை என்றும், அதற்காகவே பள்ளியை தேர்ந்தெடுத்தேன் என்றும் கூறியுள்ளார்.
Tarence Wilson மீது பொது இடத்தில் அநாகரீகமாக நடந்து கொண்டது உள்பட நான்கு பிரிவிகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் $4000 அபராதமும் விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது
அமெரிக்க ரெஸ்டாரெண்ட்டில் பலரது முன்னிலையில் சிறுநீரை பிடித்து குடித்த இளைஞர் கைது.
அமெரிக்காவில் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள KENNEWICK என்ற இடத்தில் உள்ள ஒரு ரெஸ்டாரெண்டில் சாப்பிட வந்த ஒரு இளைஞர் பலரது முன்னிலையில் தனது சிறுநீரை தானே பிடித்து குடித்ததால் கைது செய்யப்பட்டார்.
KENNEWICK பகுதியில் உள்ள புகழ்பெற்ற Old Country Buffet என்ற ரெஸ்டாரெண்டுக்கு சாப்பிட வந்த மூன்று இளைஞர்கள், தங்களுக்கு தேவையான உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது, அவர்களில் ஒருவர் திடீரென எழுந்து நின்று தனது பேண்ட்டின் ஜிப்பை தளர்த்தி தனது சிறுநீரை ஒரு பாட்டிலில் பிடித்து, அதை தானே பருகினார். இதனால் அருவெருப்பு அடைந்த மற்ற வாடிக்கையாளர்கள் ரெஸ்டாரெண்ட் மானேஜரிடம் புகார் கூறினர்.
ரெஸ்டாரெண்ட் மேனேஜர், அந்த மூன்று இளைஞர்களையும் வெளியேறுமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் அதற்கு அவர்கள், தாங்கள் எவ்வித சட்டவிரோத சம்பவத்தையும் செய்யவில்லை என்றும், அதனால் வெளியேற முடியாது என்றும் வாதம் செய்தனர்.
பின்னர் காவல்துறையினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. KENNEWICK காவல்துறை அதிகாரி Sgt. Ken Lattin, சம்மந்தப்பட்ட இளைஞரை கைது செய்தார். தன்னுடைய சிறுநீரை தானே குடிப்பது சட்டப்படி தவறில்லை எனினும், பொது இடத்தில் அநாகரீகமாக நடந்து கொண்டதற்காக கைது செய்யப்படுவதாக கூறினார்.
இருப்பினும் அந்த இளைஞரை சிறையில் அடைக்காமல், அவருக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டதாகவும், இனியொருமுறை இம்மாதிரியான செய்கைகளில் ஈடுபடக்கூடாது என அறிவுரை கூறப்பட்டதாகவும் கூறப்படுகிறது.