அமெரிக்கா-நியூர்க்கில் பள்ளி நேரத்தில் பலருடன் உடலுறவு தலைமை ஆசிரியை டிஸ்மிஸ் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை
05 May,2014
அமெரிக்காவில் உள்ள பிரபல பள்ளியில் பலருடன் உறவு கொண்ட தலைமை ஆசிரியை பணி நீக்கம் செய்யப்பட்டார்.
அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தில் உள்ள லாங் ஐலேண்டில் ராபர்ட் வாக்னர் பள்ளியில் தலைமை ஆசிரியையாக இருந்தவர் ஆன்னி ஸ்மட்ஸ் சீபுல்லா(35). அவர் பள்ளியில் வைத்து ஒரு மாணவனின் தந்தை உள்பட பலருடன் உறவு கொண்டுள்ளார். இந்நிலையில் அவரது முன்னாள் காதலர் ஒருவர் அவரின் காம லீலைகள் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துவிட்டார். மேலும் அவர் பள்ளியில் வழங்கப்பட்ட 3 லேப்டாப்களையும் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார். அந்த லேப்டாப்களில் சீபுல்லா பலருடன் உறவு கொண்ட புகைப்படங்கள் இருந்துள்ளன. தலைமை ஆசிரியை பள்ளிக் காவலாளியுடன் காவலாளியின் அறையில் உறவு கொண்டது, விசிட்டிங் துணை தலைமை ஆசிரியருடன் புத்தகங்களை பாதுகாக்கும் அறையில் உறவு கொண்டது. ஆகிய நேரங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அந்த லேப்டாப்களில் இருந்தது. சீபுல்லா இத்தனையும் பள்ளி நேரத்தில் தான் செய்துள்ளார்.
இதனால் பள்ளிநிர்வாகம் இவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து இவரை டிஸ்மிஸ் செய்தது.இந்த தகவல்களை போலீசாருக்கு அளித்த முன்னாள் காதலர் சீபுல்லாவின் பள்ளியில் படிக்கும் மாணவனின் தந்தை ஆவார். இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி நிர்வாகம் சீபுல்லாவை பணிநீக்கம் செய்ததுடன், போலீசார் விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.