பின்லாந்து விமான விபத்தில் 8 பாராசூட் வீரர்கள் பலி
23 Apr,2014
பின்லாந்து விமான விபத்தில் 8 பாராசூட் வீரர்கள் பலி
பின்லாந்து நாட்டின் சதாகுந்தா பகுதியில் விமான விபத்தில் 8 பாராசூட் வீரர்கள் பலியாகியுள்ளனர்.
பின்லாந்தி குட்டி விமானம் ஒன்று 10 பாராசூட் வீரர்களை ஏற்றிக் கொண்டு சென்றுள்ளது. விமானி ஒருவர் ஓட்டினார். பாராசூட்டில் இருந்து வீரர்கள் குதிக்கும் சாகச நிகழ்ச்சிக்காக அவர்கள் ஏற்றி செல்லப்பட்டுள்ளனர். ஜாமிஜர்வி விமான நிலையம் அருகே விமானம் பறந்த போது அதில் திடீரென கோளாறு ஏற்பட்டது. விமானம் தரையில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. முன்னதாக விமானி உள்பட 3 பேர் பாராசூட் மூலம் விமானத்தில் இருந்து குதித்துவிட்டனர். மற்றவர்கள் சிக்கி கொண்டனர். சிக்கி கொண்ட 8 பாராசூட் வீரர்கள் தீயில் கருகி பலியானார்கள். விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. காயம் அடைந்தவர்கள் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர்