சிறிலங்காவில் அரசியல் நலனுக்காக பொய் சொல்வது வழக்கமே“ - எரிக் சொல்ஹெய்ம் கருணாவுக்கு பதிலடி
31 Dec,2010
ஆயுதங்கள் வாங்குவதற்காக விடுதலைப் புலிகளுக்கு நோர்வே அரசாங்கம் நிதியுதவி வழங்கியதாக சிறிலங்கா அமைச்சர் முரளிதரன் தெரிவித்த குற்றச்சாட்டை நோர்வே அமைச்சரும், சிறலங்காவுக்கான முன்னாள் சமாதான ஏற்பாட்டாளருமான எரிக் சொல்ஹெய்ம் நிராகரித்துள்ளார்.
நோர்வே ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் சிறிலங்கா அமைச்சர் முரளிதரன் தெரிவித்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் அண்மையில் சாட்சியமளித்த போது கருணா எனப்படும் அமைச்சர் முரளிதரன் இந்தக் குற்றச்சாட்டைத் தெரிவித்திருந்தார்.
“ இது நகைப்புக்கிடமானது. பொய்யான இந்தக் கூற்று அரசியல் உள்நோக்கம் கொண்டது.
சிறிலங்காவில் அரசியல் நலனுக்காக பொய்கள் பயன்படுத்தப்படுவது வழக்கமே“ என்றும் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.