18 மணித்தியாலத்துக்குள் சிக்கிய அண்ணன் தம்பியின் கொள்ளை!

09 Apr,2014
 

18 மணித்தியாலத்துக்குள் சிக்கிய அண்ணன் தம்பியின் கொள்ளை!

அண்­மைக்­கா­ல­மாக இலங்­கையில் முக மூடிக் கொள்­ளைகள் அதி­க­ரித்­துள்­ளதை அவ ­தா­னிக்க முடி­கின்­றது. குறிப்­பாக கொழும்பு மற்றும் அதனை அண்­டிய பகு­தி­க­ளிலும் மேல் மாகா­ணத்­தி­லுமே இவ்­வா­றான கொள்­ளைகள் அடிக்­கடி நிகழ்­வதை அவ­தா­னிக்க முடி­கின்­றது.

இந்த கொள்­ளைகள் வங்­கிகள், நிதி நிறு­ வ­னங்கள் மற்றும் நாணய மாற்று நிலை­யங்­ களை இலக்­காக கொண்­டுள்­ள­தையும் நாம் அவ­தா­னிக்க முடி­கின்­றது.இந்த கொள்­ளை­க­ளுக்கு முகத்தை முழு­மை­யாக மறைக்கும் தலைக்­க­வசம் பர­வ­லாக பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ ள­துடன் கைத்­துப்­பாக்கி உள்­ளிட்ட ஆயு­தங்­களும் மிரட்­ட­லுக்கு பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளமை வெளிப்­ப­டை­யான விட­யங்­களே.

இந்த வரி­சையில் இந்த வாரம் இரு கொள்­ளைகள் தலை நகரை அண்­டிய அல்­லது மேல் மாகா­ணத்­துக்கு உட்­பட்ட பிர­தே­சங்­களில் பதி­வா­னது எனலாம். முதல் சம்­பவம்   ஞாயி­றன்று நள்­ளி­ரவு   வேளையில்   சீதுவை பகு­தியில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் பதி­வா­கி­யி­ருந்­தது.

24 மணி நேரம் இயங்கும் கொமர்ஷல் வங்­கியின் விஷேட கிளைக்கு அன்­றைய தினம் முகத்தை முழு­மை­யாக மறைக்கும் தலைக்­க­வசம் அணிந்து வந்த ஆயுதம் தரித்த கொள்­ளை­யர்கள் முகா­மை­யா­ள­ருக்கு கத்­தியால் குத்தி காயத்தை ஏற்­ப­டுத்தி விட்டு சுமார் 14 இலட்சம் ரூபாவை கொள்­ளை­யிட்டு சென்­றி­ருந்­தனர்.

இந்த சம்­பவம் மறக்­கப்­படும் முன்­ன­ரேயே கடந்த செவ்­வா­யன்று களுத்­துறை மாவட்­டத்தின் மத்­து­கம பிர­தே­சத்தில் மத்­து­கம – அக­ல­வத்தை பிர­தான பாதையில் அமைந்­துள்ள தனியார் நிதி நிறு­வனம் ஒன்­ருக்கு எடுத்து வரப்­பட்ட 50 இலட்சம் ரூபா கொள்­ளை­யி­டப்­பட்­டது.

கொழும்­பி­லி­ருந்து குறித்த லீஸிங் நிறு­வ­ன­மான எல்.ஓ.எல்.சீ.இற்கு எடுத்­து­வ­ரப்­பட்­ட­தாக கூறப்­படும் இந்த பணத்­தொகை மத்­து­கம – அக­ல­வத்தை பிரதான பாதையில் அமைந்­துள்ள அந்த நிறு­வ­னத்­திற்கு முன்­பாக வைத்தே மோட்டார் சைக்­கிளில் முகத்தை முழு­மை­யாக மறைக்கும் ஹெல்­மட்­டுடன் வந்த இருவர் கொண்ட கொள்ளைக் குழுவால் கொள்­ளை­யி­டப்­பட்­ட­தாக மத்­து­கம பொலி­ஸா­ருக்கு அளிக்­கப்­பட்ட முறைப்­பாட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தொடர்ச்­சி­யாக இடம்­பெறும் இவ்­வா­றான கொள்­ளைகள் தொடர்பில் இச்­சம்­ப­வத்தால் பொலி­ஸா­ருக்கு பாரிய சவால் ஏற்­பட்­டது எனலாம். ஏனெனில் இந்த சம்­ப­வத்தை தொடர்ந்து முகத்தை முழு­மை­யாக மறைக்கும் தலைக்­க­வ­சங்கள் தொடர்­பி­லான சட்­டத்தை மீள அமுல் படுத்­து­வது குறித்து ஆராயும் அள­வுக்கு விடயம் பார­தூ­ர­மா­னது.

எவ்­வா­றா­யினும் இந்த கொள்ளை தொடர்­பி­லான அனைத்து மர்­மங்­க­ளையும் நீக்கி சந்­தேக நபர்­களை அடை­யாளம் கண்டு அவர்­களை கைது செய்ய பொலி­ஸா­ருக்கு வெறும் 18 மணித்­தி­யா­லங்­களே தேவைப்­பட்­டது.

ளாடிறஐஅயபநஐnளுவடிசல6களுத்­துறை பிராந்­தி­யத்­துக்குப் பொறுப்­பான பொலிஸ் அத்­தி­யட்சர் ரொஷான் டீ சில்வா மற்றும் மத்­து­கம உதவிப் பொலிஸ் அத்­தி­யட்சர் பியரத்ன ஆகி­யோரின் பூரண கட்­டுப்­பாட்டில் மத்­து­கம பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி தலை­மை­யி­லான மூன்று விஷேட பொலிஸ் குழுக்கள் கொள்­ளை­யர்­களைத் தேடி வலை விரித்­தன.

இந்த கொள்­ளை­யுடன் தொடர்­பு­டைய அனைத்து சந்­தேக நபர்­க­ளையும் கைது செய்­துள்ள பொலிஸார் மேல­திக விசா­ர­ணை­களை தற்­போதும் தொடர்ந்து வரு­கின்­றனர். கொள்­ளை­யி­டப்­பட்­ட­தாக முறை­யி­டப்­பட்ட 50 இலட்சம் ரூபா பணத்தில் இது­வரை 47.5 இலட்சம் ரூபா வரை­யி­லான பணத்­தொகை பொலி­ஸாரால் மீட்­கப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சா­ளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் அஜித் ரோஹன தெரி­விக்­கின்றார்.

குறிப்­பாக இந்த கொள்ளை தொடர்பில் விசா­ர­ணை­களைத் தொடர்ந்த மூன்று பொலிஸ் குழு­வுக்கும் பொது­மக்­களின் உத­வி­யா­னது உச்ச அளவில் கிடைத்­தி­ருந்­தது. அதா­வது கொள்­ளை­யர்கள் இருவர் பய­ணித்த மோட்டார் சைக்கிள் கொள்­ளை­யி­டப்­பட்ட இடத்­துக்கு எவ்­வாறு வந்­தது, எப்­படி அங்­கி­ருந்து சென்­றது மற்றும் அது சென்ற பாதை குறித்து முழு­மை­யான தக­வல்­களை பொது­மக்­க­ளி­ட­மி­ருந்து பொலி­ஸா­ரினால் பெற்­றுக்­கொள்ள முடிந்­தது.

பொது மக்­களின் தக­வல்­க­ளுக்கு அமை­வாக பொலிஸார் சந்­தேக நபர்கள் இரு­வரை பொர­ல ஸ்­க­முவ பகுதி வீடொன்றில் வைத்து கைது செய்­தனர்.

20 வய­து­டைய பொர­லஸ்­க­முவ பகு­தியை சேர்ந்த சஜான் சுசான் பெரேரா மற்றும் 21 வய­தான ஹங்­வெல்லை பகு­தியை  சேர்ந்த துமிந்து சங்­சல ஆகி­யோ­ரையே பொலிஸார் கைது செய்­தனர். பொர­லஸ்­க­முவ பகு­தியில் உள்ள சுசான் பெரே­ராவின் வீட்டில் இவ்­விரு சந்­தேக நபர்­களும் உறங்கிக் கொண்­டி­ருந்த போது அங்கு சென்ற பொலிஸ் குழு­வி­னரே அவர்­களைக் கைது செய்­தனர். இவ்­விரு இளை­ஞர்­க­ளையும் கைது செய்­ததை அடுத்து இந்த கொள்ளை சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய பல தக­வல்­களை பொலி­ஸாரால் வெளிப்­ப­டுத்த முடிந்­தது.

பொலி­ஸாரின் விசா­ர­ணை­களில் செவ்­வா­யன்று காலையில் முக மூடி அணிந்து அல்­லது முகத்தை முழு­மை­யாக மறைக்கும் ஹெல்மட் அணிந்து பணத்­தொ­கை­யினைக் கொள்­ளை­யி­ட­வந்­த­வர்கள் இவர்கள் இரு­வ­ருமே என உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது. ஆரம்­பத்தில் இந்த கொள்­ளையின் பின்­ன­ணியில் பாரிய திட்­ட­மிட்ட குழு­வொன்று இ­ருக்கவேண்டும் என சந்­தே­கித்தே பொலிஸார் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தி­ருந்­தனர்.

ஏனெனில் கொள்­ளை­யி­டப்­பட்ட பணத்தின் அளவு, கொள்­ளை­யி­டப்­பட்ட நேரம் உள்­ளிட்டவற்றை ஒப்­பிட்டு பார்த்த பொலிஸார் அது தொடர்பில் கூடிய கவனம் செலுத்­தி­ய­துடன் திட்­ட­மிட்ட கொள்ளை என்ற ரீதி­யிலும் விசா­ர­ணை­களைத் தொடர்ந்­தனர்.

இதன் பல­னாக கைது செய்­யப்­பட்ட இளை­ஞர்கள் உறங்­கிக்­கொண்­டி­ருந்த அவர்களில் ஒரு­வரின் வீட்­டி­லி­ருந்து 2 இலட்­சத்து 32 ஆயிரம் ரூபா பணத்­தினை பொலிஸார் கைப்­பற்­றினர். இது பொலி­ஸா­ருக்கு ஆச்­ச­ரி­யத்தை ஏற்­ப­டுத்­தி­யது. ஏனெனில் 50 இலட்சம் ரூபா பணம் கொள்­ளை­யி­டப்­பட்ட நிலையில் 2 இலட்­சத்து 32 ஆயிரம் ரூபாவே சந்­தேக நபர்­க­ளி­ட­மி­ருந்து மீட்கக் கூடி­ய­தாக இருந்­தது.

அதிர்ச்­சி­ய­டைத்த பொலிஸார் விசா­ர­ணையின் கோணத்தை மாற்­றினர். களுத்­துறை பொலிஸ் அத்­தி­யட்சர் ரொஷான் டீ சில்வா மத்­து­கம உதவிப் பொலிஸ் அத்­தி­யட்சர் பியரத்ன ஆகி­யோரின் பூரண கண்­கா­ணிப்பு மற்றும் ஆலோ­ச­னையின் பேரில் நீண்ட நேரம் சந்­தேக நபர்கள் இரு­வரும் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டனர்.

இதன் போதே இக்­கொள்ளை தொடர்­பான முக்­கிய தகவல் பொலி­ஸா­ருக்கு கிடைத்­தது. அதா­வது, பொர­லஸ்­க­முவை பகு­தியை சேர்ந்த மர வேலைப்­பா­டு­களை செய்யும் நபர் ஒருவர் ஊடா­கவே அந்த நிதி நிறு­வ­னத்­துக்கு பணம் எடுத்து வரு­வது தொடர்­பி­லான அனைத்து தக­வல்­களும் அல்­லது கொள்ளை தொடர்­பான அடிப்­படை தக­வல்கள் அனைத்தும் இந்த இரு இளை­ஞர்­க­ளுக்கும் கிடைத்­துள்­ளமை தொடர்­பான தக­வலே அது­வாகும்.

அந்த நபர் தொடர்­பிலும் பொலிஸார் விசா­ர­ ணை­களை முடுக்­கி­விட்­டனர். குறித்த திக­தி யில் குறித்த நேரத்தில் அந்த நிறு­வ­னத்­துக்கு பணம் எடுத்து வரப்­படும் தக­வலும் அந்த நேரத்தில் கொள்­ளை­யி­டலாம் என்ற மேல­திக ஆலோ­ச­னையும் அந்த மர வேலைப்­பா­டுகள் செய்யும் நபர் ஊடா­கவே குறித்த இளை­ஞர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளமை பொலி­ஸா­ருக்கு தெரி­ய­வந்­தது.

இத­னை­விட மிக முக்­கி­ய­மான தகவல் ஒன்று பொலி­ஸா­ருக்கு இதன் போது கிடைத்­தது. அத­ாவது இந்த மர வேலைப் பாடுகள் செய்யும் நபர், குறித்த நிதி நிறு­வ­னத்­துக்கு பணத்­தினை எடுத்­து­வரும் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்­களில் பிர­தா­ன­மா­ன­வ­ருக்கு சகோ­தர முறை உறவு என்­பதே அந்த தக­வ­லாகும். அதா­வது குறித்த பாது­காப்பு அதி­கா­ரியும், மர வேலைப்­பா­டு­களை செய்யும் நபரும் அண்­ணனும் தம்­பியும் என பொலிஸ் விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­தது.

இந்த தக­வலின் அடிப்­ப­டையில் விசா­ர­ணை­களை மேற்­கொண்ட பொலிஸார் பணத்­துக்கு பாது­காப்பு அளிக்கும் அதி­கா­ரி­யான தம்­பி­யி­னா­லேயே அண்­ண­னான மர வேலைப் பாடுகள் செய்­ப­வ­ருக்கு கொள்­ளைக்கு தேவை­யான தக­வல்கள் வழங்­கப்­பட்­டுள்­ளமை உறு­தி­யா­னது.

அத்­துடன் சம்­பவ தினம் கொழும்­பி­லி­ருந்து மத்­து­கம பகு­தியில் உள்ள அந்த நிதி நிறு­வ­னத்­துக்கு பணம் கொண்­டு­வ­ரப்­பட்ட போது பணம் கொண்­டு­வ­ரப்­பட்ட வேனின் பின்னால் ‘ டிமோ பட்டா’ ரக லொறி­யொன்றில் அண்­ண­னான மர வேலைப் பாடுகள் செய்யும் நபர் பய­ணித்­துள்­ள­மையும் கொள்­ளையின் போது வேனுக்கு அருகில் அவர் டிமோ பட்டா லொறியில் இருந்­துள்­ள­மையும் உறு­தி­யா­னது.

அத்­துடன் கொழும்­பி­லி­ருந்து மத்­து­கம பகு­திக்கு பணத்­தினை கொண்­டு­வ­ரு­வ­தற்குள் அண்­ணனும் தம்­பியும் சுமார் 38 தடவைகள் தொலை­பே­சியில் தொடர்பு கொண்­டுள்­ளமை விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­தது.

இதன் போது கொழும்­பி­லி­ருந்து அந்த நிதி நிறு­வ­னத்­துக்கு கொண்­டு­வ­ரப்­பட்ட பணத்­தொகை அடங்­கிய பை ஒன்­றுடன் வேனில் வந்த பாது­காப்பு அதி­காரி (தம்பி) இறங்கி நிறு­வ­னத்­துக்கு செல்ல முற்­ப­டு­கையில் மோட்டார் சைக்­கிளில் முகத்தை மறைக்கும் வண்ணம் தலைக்­க­வசம் அணிந்து வந்த குறித்த இள­ஞர்கள் இரு­வரும் அந்த பையை கொள்­ளை­யிட்டு சென்­றுள்­ளனர்.

 

எவ்­வா­றா­யினும் பொலி­ஸா­ருக்கு சம்­பவம் தொடர்­பி­லான சந்­தே­கங்கள் தீர­வில்லை. ஏனெனில் 50 இலட்சம் ரூபா கொழும்­பி­லி­ருந்து கொண்­டு­செல்­லப்­பட்­டுள்­ளதை ஏற்­க­னவே உறுதி செய்த பொலிஸ் அதி­கா­ரிகள் கொள்­ளை­ய­டித்­தவர்கள் என கூறப்­பட்ட இளை­ஞர்­க­ளி­ட­மி­ருந்து சுமார் 2 இலட்­சத்­துக்கு சற்று அதி­க­மான பணத்­தொ­கையே மீட்டிருந்தனர். அப்­ப­டி­யானால் எஞ்­சிய பணத்­தொகை எங்கே என்­பதே பொலி­ஸாரின் கேள்­வி­யாக இருந்­தது.

இத­னி­டையே கொழும்­பி­லி­ருந்து பணத்­தினை கொண்டு சென்ற பாது­காப்பு ஊழி­யர்கள் இருவர், வேனின் சாரதி உள்­ளிட்ட சந்­தேக நபர்­க­ளையும் பொலிஸார் கைது செய்­தனர்.

 

தொடர்ந்தும் பொலி­ஸா­ரினால் முன்­னெ­டுக்­கப்­பட்ட விசா­ர­ணை­களில் பொலி­ஸாரின் சந்­தே­கங்­க­ளுக்­கான விடை கிடைத்­தது. கொழும்­பி­லி­ருந்து 50 இலட்சம் ரூபா கொண்­டு­வந்த போதும் வேனி­லி­ருந்து இறங்கும் போது குறித்த பாது­காப்பு அதி­காரி 10 இலட்சம் ரூபா அடங்­கிய பை ஒன்­று­ட­னேயே இருந்­துள்ளார். அந்த 10 இலட்சம் ரூபா அடங்­கிய பையையே மோட்டார் சைக்­கிளில் வந்த சந்­தேக நபர்­க­ளான இள­ஞர்கள் இரு­வரும் கொள்­ளை­யிட்டு சென்­றுள்­ளனர்.

மிகுதி 40 இலட்சம் ரூபா­வி­னையும் வேனில் ஆசனம் ஒன்றின் கீழ் குறித்த நபர் மறைத்து வைத்­துள்ளார். விஷேட பொலிஸ் குழு சம்­பவம் இடம்­பெற்ற மறு நாளான புத­னன்று அந்த வேனை மீண்டும் சோதனை செய்த போது40 இலட்சம் ரூபா பணமும் பொலி­ஸா­ரினால் மீட்­கப்­பட்­டது.

 

அத்­துடன் இளை­ஞர்கள் இரு­வரும் மோட்டார் சைக்­கிளில் கொள்­ளை­யிட்டு சென்ற 10 இலட்சம் ரூபா பணத்­தொ­கையில் 5 இலட்சம் ரூபா பொர­லஸ்­க­மு­வையில் உள்ள இளைஞர் ஒரு­வரின் வீட்டில் வைத்து இந்த திட்­டத்தை வகுத்­த­தாக கூறப்­படும் பாது­காப்பு அதி­கா­ரியின் அண்­ண­னான மர வேலைப் பாடுகள் செய்யும் நப­ருக்கு வழங்­கப்­பட்­டுள்­ள­மையும் விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது.

கொள்­ளைக்கு பயன்­ப­டுத்­தப்­பட்ட மோட்டார் சைக்கிள், பணத்­தினை எடுத்துச் சென்ற வேன் ஆகி­ய­வற்­றுடன் ஆறு சந்­தேக நபர்­களை கைது செய்த பொலிஸார் மர வேலைப் பாடுகள் செய்யும் நபரை தேடி வலை விரித்­தனர்.

அதன் படி அந்த நப­ரையும் பொர­லஸ்­க­முவ பகு­தியில் வைத்து விஷேட பொலிஸ் குழு அவ­ரது டிமோ பட்டா லொறி­யுடன் கைது செய்­தி­ருந்த நிலையில் அவ­ரிடம் இருந்தும் சுமர் 5 இலட்சம் ரூபா வரை­யி­லான பணத்­தொ­கை­யினை மீட்­டனர்.

இந் நிலையில் குறித்த கொள்­ளை­யுடன் தொடர்­பு­டைய அனைத்து சந்­தேக நபர்­க­ளையும் கைது செய்­தி­ருந்த பொலிஸார் கொள்­ளை­யி­டப்­பட்ட பணத்­தொ­கையின் 47 இலட்­சத்து 32 ஆயிரம் ரூபா­வுக்கும் அதி­க­மான தொகையை கைப்­பற்­றி­யுள்­ளனர்.

எஞ்­சிய பணத்­தொகை தொடர்­பி­லான விசா­ர­ணைகள் தொடர்­வ­துடன் சந்­தேக நபர்கள் தடுப்புக் காவல் உத்­த­ரவின் கீழ் வைக்­கப்­பட்டு விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர்.

800734215வாநைக1பொலி­ஸாரின் விசா­ர­ணை­களில் எல்.ஓ.எல்.சீ.என்ற குறித்த நிதி நிரு­வ­னத்தின் பாது­காப்பு பணி தனியார் பாது­காப்பு நிறு­வனம் ஒன்­றிடம் கைய­ளிக்­கப்­பட்­டி­ருந்­துள்­ள­துடன் பணத்­தினை பாது­காப்­பாக எடுத்துச் செல்லும் பணியில் ஈடுப­டுத்­தப்­பட்­டி­ருந்த அதி­காரி (இக்­கொள்­ளையின் முக்­கிய சூத்­தி­ர­தா­ரி­களில் ஒருவர் )  6 வரு­டங்­க­ளாக பாது­காப்புப் பணியில் இருப்­பவர் எனவும் தெரி­ய­வந்­துள்­ளது.

கலே­வல பிர­தே­சத்தை சேர்ந்த இவர் இன்­னிகே ராஜ­பக் ஷ என பொலிஸார் குறிப்­பி­டு­கின்­றனர். இவர் 27 வய­தான நபர் என்­பதும் விசா­ர­ணை­களில் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் அஜித் ரோஹன தெரி­விக்­கின்றார்.

கடந்த இரு மாதங்­களில் மட்டும் மேல் மாகா­ணத்­துக்குள் முக­மூடி அணிந்த கொள்­ளை­யர்­களால் அல்­லது முகத்தை முழு­மை­யாக மூடும் தலைக் கவசம் அணிந்­த­வர்­களால் 9 கொள்­ளைச்­சம்­ப­வங்கள் பதி­வா­கி­யுள்­ளன. நீர்­கொ­ழும்பு. பாதுக்கை,கொஹு­வலை,மாலபே, கிரு­ளப்­பனை, மத்­து­கம, நுகே­கொடை மற்றும் சீதுவை ஆகிய பகு­தி­களில் இதற்கு முன்னர் கடந்த இரு மாதங்­க­ளுக்குள் கொள்ளை சம்­ப­வங்கள் இடம்பெற்றிருந்தன.

இதன்போது கொள்­ளை­யர்கள் துப்­பாக்­கியை காட்டி பய­மு­றுத்­தி­யி­ருந்­த­துடன் முகத்தை முழு­மை­யாக மறைக்கும் தலைக்­க­வ­சத்­தி­னையும் அணிந்­தி­ருந்­தனர். எவ்­வா­றா­யினும் இந்த சம்­ப­வங்­களின் போது குறித்த நிறு­வ­னங்­க­ளுக்கு பாது­காப்­ப­ளித்த எந்­த­வொரு அதி­கா­ரியும் தமக்கு வழங்­கப்­பட்­டுள்ள ஆயு­தத்தை பயன்­ப­டுத்தி இருக்­க­வில்லை.

எனினும் பாது­காப்பு தொடர்பில் அந்த நிறு­வ­னங்­களின் அச­மந்த போக்கும் இக்­கொள்­ளை­யர்­க­ளுக்கு வாய்ப்­பாக அமைந்­து­விட்­ட­தாக கடந்த இரு மாதங்களாக இடம்பெற்ற சம்பவங்களை சுட்டிக்காட்டி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹன குறிப்பிடுகிறார்.

அத்துடன் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ஆயுதம் வழங்கப்பட்டுள்ள நிலையில் சட்ட திட்டங்களுக்கு அமைவாக இவ்வாறான சம்பவங்களின் போது அவர்கள் அதனை பயன்படுத்த வேண்டும் எனவும் அது ஒரு சீருடையாக அலங்கரிக்க வழங்கப்பட்டதல்ல எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

எது எப்படியோ, நாட்டில் அண்மைக்காலமாக கொள்ளைச்சம்பவங்கள் அதிகரித்து விட்டன. குற்றச் செயல்களை கட்டுப்படுத்த பொலிஸார் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக அவற்றை கட்டுப்படுத்த சமூக மட்டத்திலான நடவடிக்கைகளும் அவசியமானதாகும். இது தொடர்பில் பொது மக்கள் மிகத் தெளிவாக இருக்க வேண்டும்.அப்போது தான் குற்றமற்ற அமைதியான பாதுகாப்பான சூழல் ஒன்றை உருவாக்க முடியும்.

மத்துகம சம்பவத்தை பொறுத்தவரை கொள்ளையர்களை வெறும் 18 மணிநேரத்துக்குள் பொலிஸார் கைது செய்தனர். இதில் பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக முக்கியமானதாகும். இவ்வாறே பொதுமக்கள் பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்கும் போது குற்றவாளிகளை இலகுவில் கைது செய்ய முடியுமாவதோடு குற்றச் செயல்களையும் கட்டுப்படுத்த முடியும்.

தொடரும் வங்கி, நிதி நிறுவன கொள்ளைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க பொலிஸார் மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு எம்மாலான உதவிகளையும் வழங்கும் போது மட்டுமே அவற்றை முற்றாக ஒழிக்க முடியும்.

-எம்.எப்.எம்.பஸீர்-



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies