வரலாற்றில் இன்று Today in History ஏப்ரல் 5/6
06 Apr,2014
வரலாற்றில் இன்று Today in History ஏப்ரல் 5/6
1456 - சென் பாட்ரிக் அயர்லாந்துக்கு மத தூதராக வந்தார்.
1614 - வேர்ஜீனியாவில் அமெரிக்கப் பழங்குடியினளான போக்கஹொண்டாஸ் ஆங்கிலேய குடியேற்றவாதியான ஜோன் ரோல்ஃப் என்பவனைத் திருமணம் புரிந்தாள்.
1654 - ஆங்கில-டச்சுப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு வெஸ்ட்மின்ஸ்டர் உடன்பாடு எட்டப்பட்டது.
1792 - அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் வாஷிங்டன் முதற் தடவையாக வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தினார்.
1804 - முதற்தடவையாக விண்கல் ஒன்று வீழ்ந்தது ஸ்கொட்லாந்தில் பதிவானது.
1879 - பொலிவியா, மற்றும் பெரு மீது சிலி போரை அறிவித்தது. பசிபிக் போர் ஆரம்பமானது.
1897 - கிரேக்கத்துக்கும் ஓட்டோமான் பேரரசுக்கும் இடையில் போர் ஆரம்பமானது.
1921 - போரின் போது கடைபிடிக்க வேண்டிய புதிய வரைமுறைகளை அறிவித்தது அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம்.
1930 - மகாத்மா காந்தி அரபிக் கடலின் குஜராத் கடற்கரையோரப் பகுதியான தண்டியில் உப்புச் சட்டத்தை மீறி உப்பைக் கையிலே அள்ளி எடுத்து வந்து தனது 241 மைல் நடைப் பபயணத்தை முடித்தார்.
1942 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியப் போர்க்கப்பல்கள் இலங்கையைத் தாக்கின. இரண்டு பிரித்தானியக் கப்பல்கள் தாக்கப்பட்டன.
1944 - இரண்டாம் உலகப் போர்: கிளெய்சோரா என்ற கிரேக்க நகரில் 270 உள்ளூர் மக்கள் ஜெர்மனியினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1945 - பனிப்போர்: யோகொஸ்லாவியாவினுள் சோவியத் படைகள் தற்காலிகமாக நுழைவதற்கு அந்நாட்டு அதிபர் ஜோசப் டீட்டோ சோவியத் ஒன்றியத்துடன் உடன்பாடு செய்து கொண்டார்.
1946 - 11 மாதங்கள் ஆக்கிரம்பின் பின்னர் சோவியத் படைகள் டென்மார்க் தீவான போர்ன்ஹோல்மை விட்டு விலகினர்.
1955 - ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் பதவியிலிருந்து வின்ஸ்டன் சேர்ச்சில் விலகினார்.
1956 - பிடெல் காஸ்ட்ரோ கியூபாவின் அதிபருடன் போரை அறிவித்தார்.
1956 - இலங்கைப் பொதுத்தேர்தலில் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க தலைமையிலான கட்சி வெற்றி பெற்றது.
1957 - இந்தியாவின் கேரளா மாநிலத்தில் பொதுவுடமைவாதிகள் ஆட்சியைக் கைப்பற்றினர். ஈ. எம். எஸ். நம்பூதிரிபாத் முதலமைச்சரானார்.
1968- மார்ட்டின் லூதர் கிங் சுடப்பட்ட நாள்
1971 - இலங்கை அரசிற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினர் நாட்டின் தென் பகுதிகளில் ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
1971 - வட துருவத்தை அடைந்த முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றவர் கனடாவைச் சேர்ந்த Fran Phipps.
1976 - மக்கள் சீனக் குடியரசில் தியனன்மென் சதுக்கத்தில் மாபெரும் ஆர்ப்பாட்ட நிகழ்வு இடம்பெற்றது.
1981 - தமிழீழப் போராளிகள் குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் ஆகியோர் இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர்.
1998 - அக்காஷி-கைக்கியோ பாலம், உலகின் மிகப் பெரிய தொங்கு பாலம், ஜப்பானில் 3.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் அமைக்கப்பட்டது.
ஏப்ரல் 6
நவீன ஒலிம்பிக் போட்டிகள் உதித்த நாள்.
ரௌலட் - ஆள்தூக்கிச் சட்டத்திற்கு எதிராகக் கடையடைப்பு
கிமு 648 - ஆரம்பகால சூரிய கிரகணம் கிரேக்கர்களால் பதியப்பட்டது.
1782 - தாய்லாந்து மன்னன் டாக்சின் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டான். முதலாம் ராமா மன்னனாக முடி சூடினான்.
1784 - ஒரு பலூனில் பறந்த முதல் பெண் என்ற பெருமையை பெற்றார் பிரான்சைச் சேர்ந்த Elizabeth Thible
1814 - நெப்போலியன் பொனபார்ட் பதவியில் இருந்து அகற்றப்பட்டு எல்பா தீவுக்கு நாடு கடத்தப்பட்டான்.
1865 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: ரிச்மண்ட் நகரில் ஏற்பட்ட தோல்வியின் பின்னர் கூட்டமைப்பின் இராணுவத்தினர் தமது கடைசிச் சமரை வடக்கு வேர்ஜீனியாவில் நடத்தினர்.
1869 - செலுலோயிட் கண்டுபிடிக்கப்பட்டது.
1896 - 1,500 ஆண்டுகளாக ரோம் பேரரசர் முதலாம் தியோடோசியசினால் தடைசெய்யப்பட்டிருந்த ஒலிம்பிக் போட்டிகள் பிரான்சைச் சேர்ந்த பேரன் டி குபேர்ட்டின் என்பவரின் பெரு முயற்சி காரணமாக முதற்தடவையாக கிரேக்கத்தின் ஏதன்ஸ் நகரில் ஆரம்பமாயின.
1916 - நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் உலகின் மிக அதிகச் சம்பளம் வாங்கும் நடிகர் என்ற பெருமையைப் பெற்றார். அவருக்கு மியூச்சுவல் பிலிம் கார்ப்பரேசன் என்ற நிறுவனம் 675 ஆயிரம் டாலர் வழங்கியது.
1917 - முதலாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்கா ஜெர்மனி மீது போரை அறிவித்தது.
1919 - மகாத்மா காந்தி பொது வேலை நிறுத்ததை அறிவித்தார்.
1941 - இரண்டாம் உலகப் போர்: யூகொஸ்லாவியா மற்றும் கிரேக்கத்தை ஜெர்மனி முற்றுகையிட்டது.
1959 - க்யூபாவில் அமெரிக்கச் சொத்துக்கள் பிடல் காஸ்ட்ரோவினால் நாட்டுடமை ஆக்கப்பட்டன.
1965 - "ஏளி பேட்" (Early Bird) என்ற தொடர்பாடற் செய்மதி விண்ணில் ஏவப்பட்டது.
1968 - இண்டியானா மாநிலத்தில் இடம்பெற்ற இரட்டைக் குண்டுவெடிப்புகளில் 41 பேர் கொல்லப்பட்டு, 150 காயமடைந்தனர்.
1973 - பயனியர் 11 விண்ணுக்கு ஏவப்பட்டது.
1994 - ருவாண்டா மற்றும் புருண்டி அதிபர்கள் பயணம் செய்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து ருவாண்டாவில் இனப்படுகொலைகள் ஆரம்பமானது.
1998 - இந்தியாவைத் தாக்கக்கூடியதான நடுத்தர ஏவுகணைகளை பாகிஸ்தான் சோதித்தது.
2005 - குர்தியத் தலைவர் ஜலால் தலபானி ஈராக் அதிபரானார்