வேலைத்தலத்திற்கு பொருத்தமில்லாத பத்து அடையாளங்கள்
நீங்கள் பணிபுரியும் வேலையிடத்திற்கு நீங்கள் பொருத்தமில்லாத ஒரு நபராக இருந்தால் உங்களிடம் பின்வரும் 10 குறைபாடுகள் தெரியும் என்று டேனிஸ் பத்திரிகையொன்று எழுதியுள்ளது.
அவையாவன :
01. வேலைத்தலத்திற்கு நீங்கள் காலதாமதமாகவே வருவீர்கள், ஒழுங்கீனம் காணப்படும்.
02. உங்கள் பணியின்போது பல தடவைகள் பலரிடம் மன்னிப்புக் கேட்டிருப்பீர்கள்
03. வேலைப்பழு அதிகரித்துவிட்டதாக அடிக்கடி புலம்புவீர்கள்.
04. குறை கூறுவதை விரும்புவீர்கள் அதனால் மற்றவரிடம் மதிப்பிழப்பீர்கள்.
05. நீங்கள் விரும்பும் உங்கள் மதிப்பை வேலைத்தலத்தில் நீண்டகாலம் நீடிக்க முடியாதிருக்கும்.
06. உமது வேலைத்தலம் பெறுமதியானது என்ற கணிப்பு உம்முள் அடிபட்டுப் போயிருக்கும்.
07. குறைவாகவே வேலை செய்வதாக உமது சக ஊழியர்கள் குறை கூறுவர்.
08. உனது சக ஊழியர்கள் உன்னுடன் பணியாற்ற விரும்பமாட்டார்.
09. சரியான சேவையை வழங்க முடியாது உனது வாடிக்கையாளரிடம் அடிக்கடி மன்னிப்புக் கோருவாய்.
10. பிரச்சனைகளை தீர்க்க முன்வராது தொடர்வாய், தீர்வின் முடிவை விரும்பமாட்டாய்.
மேற்கண்ட பத்து விடயங்களும் வேலையில் அக்கறை இல்லாத ஒருவரிடம் காணப்படும் பத்துவித குறைபாடுகள் என்று கூறுகிறது அப்பத்திரிகை.
ரெயில் மோதி இளைஞர் மரணம்
டென்மார்க் தி நகரத்தில் கார் ஒன்று தண்டவாளத்தைத் தாண்டியபோது ஏற்பட்ட விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாப மரணமடைந்தார்.
இன்று சனிக்கிழமை அதிகாலை ஸ்ரூவருக்கும் – திஸ்ரெல் நகரத்திற்கும் இடையில் இந்தச் சம்பவம் நடைபெற்றது, போலீசார் இதுகுறித்த விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
ரயில் வருவதை உணர்த்தும் கடவை இங்கு இல்லை என்றும் இளம் கார்ச்சாரதி ரயில் வருவதை உணராத காரணத்தால் விபத்து நடந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
விபத்து நடந்தபோது காரில் ஒருவர் மட்டுமே இருந்துள்ளார், அவர் அந்த நகரத்தைச் சேர்ந்த இளைஞராகும்.
இது இவ்விதமிருக்க மரியேயர் பகுதியில் உள்ள சல்ற் சென்டர் பகுதியில் இருந்த கார் தரிப்பிடத்தில் 23 நபர் ஒருவர் தலையில் துப்பாக்கியால் சுடப்பட்டபடி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த இளைஞரை தமக்கு முன்னரே தெரியும் என்றும் இவர் வன்முறைக் குழுக்களோடு தொடர்புபட்ட ஒருவர் என்றும் கூறுகிறார்கள் போலீசார்.
அவருக்குப் பக்கத்தில் ஆயுதம் ஒன்றும் கிடந்துள்ளது, விசாரணைகள் தொடர்கின்றன.
கட்சிகள் பெறும் ஸ்பொன்சர்களுக்கு கட்டுப்பாடு வேண்டும்
டென்மார்க் பாராளுமன்றச் சபாநாயகர் மோண்ஸ் லுக்கரொப்ற் இங்குள்ள அரசியல் கட்சிகள் வகைதொயைற்று வேண்டும் தனியார் ஸ்பொன்சர் எனப்படும் நிதியங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கட்சிகளுக்கு நிறுவனங்களும், தனியாரும் வழங்கும் பணம் ஒரு கட்டத்தில் அரசியல் கட்சிகளை விலை கொடுத்து வாங்குவது போன்ற ஊழலாக மாறிவிடும் என்றும் கூறுகிறார்.
சமீபகாலமாக யாரென்று பெயர் தெரியாமல் பெரு நிதியங்கள் வழங்பப்படும் செய்திகளும் பலருடைய கவனத்தைத் தொட்டன, உதாரணமாக முக்கிய எதிர்க்கட்சி ஒன்றுக்கு சுமார் ஒரு பில்லியன் குறோணர் பெரிய நிறுவனம் ஒன்றினால் வழங்கப்பட்டதாகவும் செய்திகள் கசிந்திருந்தன.
ஏற்கெனவே டென்மார்க்கில் அரசியல் கட்சிகள் வாங்கும் நிதியானது 20.000 குறோணருக்கு மேலாக சென்றால் அதை வழங்கியவரின் பெயர் போன்ற விபரங்களை அறிவித்தல் வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் இந்தச் சட்டம் கிடப்பில் கிடக்கிறது, நிதியம் பெறும் விளையாட்டுக்கள் தொடர்கின்றன.
டென்மார்க் பாராளுமன்றத்தில் இடம் பெறும் ஒவ்வொரு கட்சியும் பெறுகின்ற வாக்குகள் கணக்கிடப்பட்டு ஒரு வாக்குச் சீட்டுக்கு வருடம் 30 குறோணர் என்ற அடிப்படையில் கட்சிகளுக்கு அரசு நிதி வழங்குகிறது.
இந்த நிதியை 45 குறோணராக உயர்வடையச் செய்து, 10.000 குறோணருக்கு மேல் நிதி வசூலித்தால் இந்தப் பணத்தில் இருந்து எதிர்ப்பக்கக் கணிப்பீடாக அந்தத் தொகைக்கு சமமான தொகையை குறைக்க வேண்டும் என்றும் கருதுகிறார் சபாநாயகர்.
மேலும் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு முன்னதாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இந்தச்சட்டம் எவ்வாறு கடைப்பிடிக்கப்படுகிறது என்றும் ஆராயவுள்ளார்.
நோர்வே, சுவீடன் ஆகிய நாடுகளில் ஒரு வாக்குச் சீட்டுக்கு 90 குறோணர் அரசால் வழங்கப்படுகிறது.
பொது மக்கள் அளிக்கும் வாக்குகளால் மக்களுக்கு நன்மை கிடைக்காவிட்டாலும், கட்சிகளுக்கு நல்ல வருமானம் கிடைப்பதை இது உணர்த்துகிறது.
ஐரோப்பிய ஒன்றிய ஊழல் ஒழிப்புப் பிரிவு டென்மார்க் கட்சிகள் வாங்கும் அநாமதேய பணம் குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளமை தெரிந்ததே.
இந்த நிலையில் சபாநாகர் எடுத்துள்ள முயற்சி கண்ணியமான அரசியலுக்கு அவசியம் என்பது தெரிந்ததே.
தாயும் பிள்ளையும் சடலமாகக் கிடந்தனர்
டென்மார்க் பொண்கொல்ம் பகுதியில் உள்ள கார் தரிப்பிடமொன்றில் தாயும் பிள்ளையும் சடலமாகக் கிடந்தனர்.
இந்தப் பெண்மணியின் வாழ்க்கைத் துணைவர் விசாரிக்கப்பட்டு வருகிறார் இன்னமும் பூரண விபரங்கள் வெளியாகவில்லை, விசாரணைகள் தொடர்கின்றன.
இதேவேளை ஓகூஸ் நகரத்தில் உள்ள கிளை நகரான பிதரில் குடியிருப்புப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
சிகரட் புகைத்தலால் ஏற்பட்ட தீ விபத்து என்று சந்தேகிக்கப்படுகிறது.
டென்மார்க் தலைநகரில் உள்ள பாக்கன் பகுதியில் நேற்றிரவு வாரவிடுமுறை உருவேற்றங்களால் இரு குழுக்களிடையே மோதல் வெடித்தது.
ஒரு கட்டத்தில் துப்பாக்கிச் சூடுகள் பொறிகக்கிப் பறந்தன, ஆனால் மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை.
நடைபெற்ற மோதலில் மூன்று பேருக்கு பலத்த கத்திக்குத்துக்கள் இறங்கின ஒருவர் ஆபத்தான நிலையில் இருந்துள்ளார்.
தற்போது போலீசார் அப்பகுதிகளில் காணப்படும் வெற்றுத் தோட்டாக்களை சேமித்து வருகிறார்கள், பல நூறுபேர் மதுவருந்திக் கொண்டிருந்த ஸ்போட்ஸ் பாரில் இது நடைபெற்றது.
மறுபுறம் அமேயர் பகுதியில் 23 வயது இளைஞர் ஒருவருடைய தலையில் போத்தல் அடி இறங்கியது, அதைத் தொடர்ந்து மூன்று தடவைகள் கத்திக்குத்துக்கள் இடம் பெற்றன.
ஓ பூலவாட் பகுதியில் இன்னொரு 23 வயது நபருக்கு கத்திக்குத்து இறங்கியது.
tks.s.durai