நீலி
06 Jan,2014
ஒரு ஊரில் ராஜேஷ், விமல்,கவிதா,சுந்தரி என்று நான்கு பேர்கள் இருந்தார்கள். அவர்கள் அனைவருக்கும் பேய் கதை கேட்பது, படிப்பது,பேசுவது இவற்றில் ஆர்வம் அதிகம்.ஒரு நாள் இவர் இணைdhaladhil நீலி என்ற பெண்ணின் கதையை படித்தார்கள். அதாவது ஒரு ஊரில் நீலி என்ற பெண் இருந்தாளாம்.அவள் மிகவும் azhagaanaval. அவளை ஒருவன் ஒரு நாள் திருமணம் செய்வதாக ஏமாற்றி கற்பழித்து விட்டான். இதை அறிந்த ஊர் மக்கள் நீலியை இந்த ஊரிலிருந்து விளக்கி வைத்தார்கள். அந்த பெண் அந்த ஊருக்கு பக்கத்தில் இருந்த அடர்ந்த காட்டில், அங்கிருந்த கனிகளை சாப்பிட்டு வாழ்ந்து வந்தாள். அவளுக்கு பிரசவ வலி வந்தது அப்போது அவள் அந்த காட்டில் இருந்த ஒரு குகைக்குள் பொய் படுத்துக்கொண்டு, என்னையும் என் குழந்தையும் காப்பாற்றுங்களேன் என்று கத்தினாள். அதை கேட்ட ஊர் மக்கள், தவறான வழியில் அந்த குழந்தை உண்டானதால் அவள் கதறியதை கண்டு கொள்ளாமல் இருந்து விட்டனர். யாரும் காப்பாற்ற வராததால் நீலியும் அந்த குழந்தையும் அந்த குகைக் குள்ளேயே இறந்து விட்டனர். அன்றிலிருந்து அந்த ஊரில் அசம்பாவிதங்கள் நடக்க ஆரம்பித்தது. ஊர் மக்கள் அந்த ஊரில் இருக்க பயந்து வெளியேறி விட்டார்கள். இன்னும் நீலியின் ஆவி அந்த காட்டில் இருப்பதாகவும், அங்கு வரும் மனிதர்களை கொன்று விடுவதாகவும் அந்த இணைய தளத்தில் படித்தார்கள். உடனே avargal அங்கு செல்ல வேண்டும் என்று முடிவு எடுத்தார்கள். அவர்கள் நான்கு பேறும் ஒரு காரில் அந்த காட்டிற்கு சென்றார்கள். காட்டிற்கு அருகே சென்ற உடன் கார் நின்று விட்டது. காடு அருகே iruppathaal, நான்கு perum நடந்து காட்டிற்குள் சென்றார்கள். கவிதா ஒரு கேமராவை எடுத்து கொண்டு நடப்பதை எல்லாம் படம் எடுத்து வந்தாள்.ராஜேஷ், விமல் மற்றும் சுந்தரி ஆகியோர் முன்னே சென்று கொண்டு இருந்தார்கள். அவருகளுக்கு பின்னே கவிதா படம் எடுத்துக் கொண்டே வந்தாள். கவிதா \"ஏய் இந்த மரத்தை எல்லோரும் பாருங்களேன் எவ்வளவு அழகாக உள்ளது\" என்று கூறி பார்த்து திரும்பும் போது ராஜேஷ் விமல் இவர்களையும் காண வில்லை. கவிதாவும் சுந்தரியும் பயந்து போய் விட்டார்கள். அவர்கள் இருவரையும் தேடினார்கள். நிறைய நேரம் தேடிய பின்பு அவர்கள் இருவரும் ஒரு இடத்தில் இறந்து போய் கிடந்தார்கள். அதை கண்ட iruvarukkum பயம் உண்டானது. நம் வீட்டிற்கு திரும்பி விடலாம் என்று முடிவெடுத்து வந்த வழியை நோக்கி சென்றார்கள். அவர்கள் எவ்வளவு தூரம் சென்றாலும் வந்த வழியே மீண்டும் மீண்டும் வந்தது. பொழுதும் சாய்ந்து இருட்டி விட்டது. இருவரும் நீலி இருந்த குகையின் அருகே வரும் பொது ஓர் அழுகை குரல் கேட்டது.
இவர்களும் மிகவும் பயந்து விட்டனர். சிறிது நேரத்திற்கு பிறகு சுந்தரியும் காணாமால் போனாள். கவித்தாவிர்க்கு நாம் இன்னும் சிறிது நேரத்தில் இறந்து விடுவோம் என்று தெளிவாக தெரிந்தது. பேய் உண்மையாக இருக்கிறது என்பதை மனிதர்களுக்கு நிரூபிபதர்காக தன மரணத்தையும் பொருட் படுத்தாமல் அந்த குகைக்குள் நுழைந்தாள். குகையின் ஒரு மூலையில் ஒக்காந்து கொண்டு தனக்கு எதிரே அந்த கேமராவை வைத்து என்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள் என்று துணிச்சலுடன் கூறினாள் . நேரம் ஆனது மிகவும் இருட்டிக் கொண்டே வந்தது. அங்கு காட்டிற்குள் இருக்கும் ஆந்தை, கழுகு அவைகளின் சப்தமும் அவளை பயப்பட வைத்தது. சிறிது நேரத்திருக்கு பிறகு அந்த அழுகை குரல் மீண்டும் கேட்டது. அவள் துணிச்சலுடன் அம்ரந்திருந்தாள்.அவள் சப்தம் கேட்கும் திசையை பார்த்த பொது ஒரு நிழல் தெரிந்தது. அவள் பயத்துடன் இருக்கம் போதே நீலி அவளைக் கொன்று விட்டாள். இவை அனைத்தும் அந்த கேமராவில் பதிவாகி இருந்தது. பல நாட்களுக்கு பின்பு அவர்களது உறவினர்கள் அவர்களை எங்கு எங்கோ தேடினார்கள். இறுதியாக அந்த காட்டினுள் அவர்களது சடலங்கள் இருந்தது. அந்த குகைக்குள் அந்த கேமராவும் இருந்தது. அந்த கேமராவை பார்த்த பொது அனைவரும் அதிர்ச்சி அடைந்தார்கள்.
இது அறிவியல் பூர்வமாக நிருபிக்கப்பட ஒரு உண்மை சம்பவம்.