றீமா 1000 கடையில் கத்திக்குத்து
25 Dec,2013
றீமா 1000 கடையில் கத்திக்குத்து
டென்மார்க் அல்பேட்ஸ் லுண்ட் பகுதியில் உள்ள றீமா 1000 கடைக்குள் நுழைந்த திருடர்கள் அந்தக் கடையில் பணியாற்றிய 41 வயது ஊழியரை இரண்டு தடவைகள் கத்தியால் குத்திவிட்டு ஓடியுள்ளனர்.
உயிராபத்தான நிலையில் இவர் றீஸ் வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சைகள் நடக்கின்றன.
திருட முயன்றவர்கள் ஓட முடியாதவாறு கடையின் கதவுகளை மூடி அவர்களை மடக்க முயன்றவேளை இச்சம்பவம் நடந்துள்ளது.
நத்தார் வியாபரம் களைகட்டியிருந்த வேளையில் திருடர்களும் ஆங்காங்கு தத்தமது கைவரிசையை காட்டியுள்ளனர்.
இன்று கடுமையான காற்று வீசிக்கொண்டிருப்பதல் ஸ்ரோவ பெல்ற் பாலத்தில் போக்குவரத்துக்கள் நிறுத்தப்பட்டு, இப்போது மறுபடியும் ஆரம்பித்துள்ளன, செக்கனுக்கு 27 மீட்டர் என்ற வேகத்தில் காற்று வீசுவதால் மணிக்கு ஐம்பது கி.மீ வேகத்திலேயே வாகனங்கள் நகருகின்றன.
நேற்று ஊதின்ச ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக ஆங்கில மொழியில் பொய்த்தகவல் கொடுத்த நபர் ஆடிய கூத்தில் நத்தார்கால ரயில் போக்குவரத்துக்கள் பெரும் பாதிப்படைந்தது தெரிந்ததே.
நேற்று சுனயூலன்ட் பகுதியில் பாரவண்டி ஒன்று தடம் புரண்டதில் அதில் எடுத்துச் செல்லப்பட்ட 6000 கோழிக்குஞ்சுகள் மரணித்துள்ளன.
நேற்று முன்தினம் கேதர்ஸ்லேவ் பகுதியில் உள்ள கடலில் சாமான் வண்டி ஒன்று மூழ்கிக்காணப்பட்டது, இதில் இருந்து ஒருவர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
அதேதினம் ருன நகரத்தில் 74 வயது நபரை தாக்கிக் கொன்ற சந்தேகத்தில் 34 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு நான்கு வாரங்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.
கீவஸ்குல் நகரத்தில் இடம் பெற்ற தீ விபத்தில் நபர் ஒருவர் இறந்தபடி கண்டெடுக்கப்பட்டார்.
நேற்று முன்தினம் லுங்புய் நகரத்தில் 47 வயது, 52 வயதுடைய இரண்டு பேரில் ஒருவருக்கு வயிற்றிலும், இன்னொருவருக்கு தலையிலும் கத்திக்குத்துக்கள் விழுந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
tks.s.durai