அகோரிகளின் ரகசிய வாழ்க்கை - ஒரு பார்வை!
04 Dec,2013
நான் கடவுள் படம் மூலமாகத்தான் நாம் அகோரிகள் என்ற ஒரு பிரிவினரைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். உண்மையில் அப்படிப்பட்டவர்கள் என்ன மாதிரியாக தங்களது வாழ்க்கையை நடத்துகிறார்கள் என்பது பெரும் அதிசயமான ஒன்றுதான்!
அவர்கள் வழிபாடு ரகசியமாஅது. அவர்களுக்கு வருத்தம், துக்கம் என்பதே கிடையாது. நன்மை, தீமை என்பதும் கிடையாது எனவேதான் அவர்கள் தாகம் எடுத்தால் தங்கள் சிறுநீரையே குடிப்பார்கள்.
எந்த ஒரு சமைத்த உணவையும் விரும்பிச் சாப்பிடுபவது போலவே மிக மோசமாக அழுக்கிபோன எந்த ஒரு உயிரியின் சதையையும் சாப்பிடுவார்கள்.
தங்களுக்கு ஒருவரை பிடித்து விட்டால் அவர்களுக்கு தங்களிடம் உள்ள அனைத்தையும் வழங்கி விடுவார்களாம் அகோரிகள். பசுமாட்டு மாமிசத்தைத் தவிர அவர்கள் எதைவேண்டுமானாலும் உணவாக எடுத்துக் கொள்வார்கள். பிணம் முதல் மனித கழிவுகள் வரை அவர்கள் உண்பார்கள் அவர்களுக்கு விருப்பு வெறுப்பு தெரியாது.
சுடுகாட்டில் சிதையின் மீது அமர்ந்து சாதனா செய்வது அவர்களது இந்த மனோ பலத்திற்கு மிகப்பெரிய காரணமாம்!
அவர்கள் வாழ்க்கை முறை மிகவும் விசித்திரமாகவும், சாதாரண இயல்பு வாழ்க்கையை வாழ்பவர்கள் ஏற்றுக்கொள்ள முடியாததாகவும் இருப்பதால் யாரும் வராத சுடுகாட்டை தங்கள் வாழ்விடமாக அவர்கள் தேர்வு செய்கின்றனர்.
அவர்கள் ஒருவிஷயத்தை குறி வைத்து விட்டால் அதனை முடிக்காமல் விடமாட்டார்கள். அதேபோல் கோபாவேசம் வந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யத் துணிந்தவர்கள். ஆனாலும் தங்கள் இருதயம் அமைதியின் இருப்பிடம் என்றே அவர்கள் கூறிக்கொள்கிறார்கள். கறுபு பாடையில் மண்டை ஓட்டை மாலையாக அணிந்து கொள்ளும் இவர்கள் இதயம் அமைதியானது என்பதைக் கேட்க சற்று வினோதமாகவே இருக்கும்சாதாரண மனிதர்களுடன் அவர்கள் பேச்சு வைத்து கொள்ளமாட்டார்கள். விலங்குகளுடன் வாழ்வதை விரும்புவர்கள். நாய்கள் அவர்களுக்கு பிடித்தமான விலங்கு. அவர்கள் சொல் பேச்சு தப்பாதவர்கள். ஒன்றை செய்கிறேன் என்றால் அதை செய்து முடித்து விட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்களாம் அகோரிகள்.
3 விதமான ஆசனங்களை அவர்கள் செய்கின்றனர். அதில் சிவாசனம் என்பது பிணத்தின் மீது நின்று செய்யும் ஆசனமாகும். ஆசனம் முடிந்தபிறகு பிணத்திற்கு பிரசாதம் அளிப்பார்கள். அது சதையாகவோ அல்லது மதுவாகவோ இருக்கலாம்.
சில வேளைகளில் மாவாவும் பிரசாதமாக அளிக்கப்படுமாம்!