மராட்டியத்தில் 3 வயது குழந்தை நரபலி
03 Dec,2013
மராட்டிய மாநிலம் யவத் மால் மாவட்டத்தில் ஒரு இடத்தில் கட்டிடப்பணி நடந்து வந்தது. நேற்று அந்த இடத்தில் 3 வயது பெண் குழந்தை மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தாள். உடனே போலீசார் சென்று பிணத்தை பார்வையிட்டு விசாரித்தனர்.
உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்தன. கண்கள் தோண்டி எடுக்கப்பட்டு இருந்தது. உடலில் இருந்து ரத்தம் எடுக்கப்பட்டு ஆங்காங்கே சிதறிக் கிடந்ததும் தெரிய வந்தது.
அந்த சிறுமியின் பெற்றோர் யார் என்று போலீசார் விசாரித்தபோது அந்தப் பகுதியில் உள்ள ஒரு குடும்பத்தினர் என தெரிய வந்தது. பெற்றோரிடம் விசாரித்தபோது அது தங்கள் குழந்தை என்று அடையாளம் காட்டினார்கள்.
3 நாட்களுக்கு முன்பு அவள் காணாமல் போய் விட்டதாக தெரிவித்தனர். குழந்தையின் பிணத்தைப் பார்த்து பெற்றோர் கதறி அழுதனர்.
யாரோ குழந்தையை கொன்று நரபலி கொடுத்து இருக்கலாம் என்று பெற்றோரும், உறவினர்களும் போலீசில் புகார் செய்துள்ளனர். இது தொடர்பாக கட்டிடப் பணியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். பின்னர் இருவரையும் அனுப்பி விட்டனர்.
இந்தச் சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதால் கொலையாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.