டென்மார்க் கேர்னிங்கில் வெடிகுண்டு அச்சுறுத்தலால் பரபரப்பு
28 Nov,2013
டென்மார்க் கேர்னிங்கில் வெடிகுண்டு அச்சுறுத்தலால் பரபரப்பு
கேர்னிங் வைத்தியசாலையின் மேற்குப்பகுதியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக வந்த தகவலைத் தொடர்ந்து நகர மத்தி பெரும் பரபரப்படைந்துள்ளது.
போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது, வாகனங்கள் பலத்த நெரிசலுடன் ஆமை வேகத்தில் ஊர்ந்து செல்கின்றன.
நேரம் சரியாக 12.34 மணிக்கு போலீசாருக்கு ஒருவர் போன் செய்து வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
பிந்திய தகவல்களின்படி போத்தல் ஒன்றில் திராவகமும், ஜேர்மனிய பட்டாசு வெடி சுற்றப்பட்டபடி காணப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
வைத்தியசாலை ஊழியர்கள் பாதுகாப்பாக நகர்த்தப்பட்டுள்ளனர், உள்ளே இருக்கும் ஊழியர்கள் வெளியே வரமுடியாமலிருக்கிறார்கள்.
வெடிகுண்டு பற்றி 37 வயது நபர் ஒருவரே போன் செய்ததாகக் கூறப்படுகிறது, அவரை போலீசார் தேடுகிறார்கள்.
இந்த நபர் நகரத்திலும் அடாவடித்தனம் செய்ததாகவும், சிறைக்கு செல்ல விரும்புவதால் இப்படிச் செய்ததாக இன்னொருவருக்குத் தெரிவித்தாகவும் செய்திகள் கூறுகின்றன.
இதுபோல ஒல்போ வைத்தியசாலையிலும் கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் இப்படியொரு தொலைபேசி அழைப்பு வந்து களேபரமாகி பின் சம்மந்தப்பட்ட நபர் பின் சரணடைந்தார்.
வைத்தியசாலை அருகில் இருந்து தகவல் தரும் எமது செய்தியாளர் இதுவரை குண்டு வெடித்த சத்தங்கள் எதுவும் கேட்கவில்லை என்கிறார்