நோ பயர் சோன் டென்மார்கின் தலை நகரத்தில் திரையிடப்பட்டது.
15 Nov,2013
நோ பயர் சோன் டென்மார்கின் தலை நகரத்தில் திரையிடப்பட்டது.
ஈழத்தமிழர்களுக்கு எதிராக சிங்கள ராணுவம் நிகழ்த்திய போர்க்குற்றங்களை ஆவணப்படமாக தயாரித்த சனல்-4 தொலைக்காட்சி இயக்குனர் கெல்லம் மெக்ரேவின்
‘நோ பயர் சோன்’ ஆவணப்படம் நேற்று 13.11.13 டென்மார்கின் தலைநகரத்தில் திரையிடப்பட்டது.
இத் திரைப்பட விழாவில் 150 திரைப்படங்கள் திரையிடப்பட்டன. ‘நோ பயர் சோன்’ 11-11-13 மற்றும் 13.11.13 ஆகிய திகதிகளில் திரையிடப்பட்டன . இரண்டு
நாட்களும் அரங்கம் நிறைந்த பார்வையளர்களுடன் திரையிடப்பட்டது.
திரைப்படத்தை அதிகளவான டெனிஸ் மனித உரிமையாளர்கள் பார்வையுற்றனர்.
சிறி லங்காவில் நடந்த போர்க் குற்றங்கள் பற்றி கெல்லம் மெக்ரேவால் சனல்-4 தொலைக்காட்சிக்காக தயாரிக்கப்பட்ட இந்த ஆவணப்படம் உலகின் பல நாடுகளில்
திரையிடப்பட்டு வருகிறது. சிறி லங்காவில் தமிழர்களுக்கு எதிராக சிறிலங்கா அரசு மேற்கொண்ட போர்க்குற்றங்களை மனதை உருக்கும் காட்சிகளுடன் படமாக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இசைப்பிரியா உயிருடன் பிடிக்கப்பட்டு சிறி லங்கா ராணுவத்தால் ஈவிரக்கம் இன்றி கொலை செய்யும் காட்சிகள் மனித உரிமை ஆர்வலர்களின் உள்ளங்களை உலுக்கியிருன்றன.
90 நிமிடங்கள் கொண்ட இந்த ஆவணப்படத்தில் சிறி லங்கா ராணுவம் முழு அளவில் நிகழ்த்திய போர்க்குற்றங்களை அம்பலப்படுத்தியிருக்கிறது.
சிறி லங்காவில் தமிழர்களின் வீடுகள் மீதும் செஞ்சிலுவை சங்க அடையாளம் பொறித்த பல மருத்துவமனைகளின் மீதும் சிறிலங்கா ராணுவம் குண்டுமழை பொழிந்ததையும்,
குழந்தைகள் மற்றும் பெண்கள் கொடூரமாக கொல்லப்படுவதையும் கொண்ட காட்சிகள் மனதை பதறவைத்தன.
சிறிலங்கா இராணுவத்திடம் சரண் அடைந்த போரளிகளை இரக்கமின்றி தலையில் சுட்டு வீழ்த்தும் காட்சிகள் கொடூரமானவை.
தேசிய தலைவரின் மகன் பாலச்சந்திரனை இரக்கமின்றி சுட்டுக்கொல்வதையும், இசைப்பிரியாவை சித்ரவதை செய்து கொல்வதையும், தமிழ்ப்பெண்கள் மீது சிறிலங்கா ராணுவம் இழைத்த பாலியல் வன்முறைகளையும் இந்த ஆவணப்படம் தோலுரித்துக்காட்டுகிறது.
இதுகுறித்து மனித உரிமை ஆர்வலர்கள் கூறும்போது, இது இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய மனித உரிமை மீறலாகும். இதுகுறித்து தன்னிச்சையான சர்வதேச
விசாரணை நடத்தி சிறிலங்காவை குற்றவாளியாக அறிவித்து விசாரிக்கவேண்டும்’ என வலியுறுத்தியுள்ளனர்.
TKS.DURAI