முட்டாள் சிரிப்புகள்
வேலு : நாங்கள் ஏழு பேர்கள் ஒரே குடையின் கீழ் நடந்து சென்றோம். ஆனால், ஒருவர் கூட நனையவில்லை.
ரமனன் : அதெப்படி?
வேலு : மழையே பெய்யவில்லையே!
நண்பர் 1 : டி.வி-க்கு கொடுக்கணும்ங்கற எண்ணத்துலயே அந்த டைரக்டர் சினிமா படம் எடுக்கறாரு போலிருக்கு...
நண்பர் 2 : எப்படி சொல்றீங்க..?
நண்பர் 1 : படத்து நடுநடுவிலே நிறைய விளம்பரப் படமும் எடுத்திருக்காரே
முட்டாள் 1 : ஏன் இத்தனை அவசரம் அவசரமாகப் பெயிண்ட் அடிக்கிறாய்?
முட்டாள் 2 : பெயிண்ட் தீர்ந்து விடுவதற்குள் அடித்துவிட வேண்டும் என்பதற்காகத்தான்.
ரானி : சென்சார் போர்டுல வேலை செய்யறவரைக் கல்யாணம் செய்துகிட்டது தப்பாப் போச்சு..
வேனி : ஏன்?
ரானி : படுக்கையறையே இல்லாம வீடு கட்டியிருக்காரு..
பாபு : இரண்டும் இரண்டும் சேர்ந்தால் எவ்வளவு?
கோபு : நான்கு!
பாபு : இல்லை / 22.
ஒருவர் : டாக்டர் செலவு மட்டும் எனக்கு மாசம் ஐந்நூறு ரூபாய் ஆகுது
மற்றொருவர் : டாக்டரோட செலவைப் போய் நீங்க ஏன் பண்றீங்க?
ரமனன் : என்னோட நாலு தம்பிங்க குளத்திலே விழுந்துட்டாங்க. ஒருத்தன் தலைமுடி மட்டும் தான் நனைஞ்சது.
முராரி : அப்படியா! மத்த மூணு பேருக்கும் நீச்சல் தெரியுமா?
ரமனன் : இல்லை. அவங்கள்ளாம் மொட்டை.
மனைவி : அட.. நமக்கேத்த சரியான ஜோடி இவதான்னு நம்ம கல்யாணத்தன்னிக்கு சந்தோஷப்பட்டீங்களா, டியர்..?
கணவன் : ஏய்.. என்ன உளர்றே? நம்ம கல்யாணத்தன்னிக்கு நீ மட்டும்தானே மணப்பொண்ணு கோலத்துல இருந்தே..?
அவர் : வியாபாரத்துல என்னோட பிரதிபலிப்பு என் மகனிடமும் தெரியுது.
இவர் : என்ன வியாபாரத்துல?
அவர் : கண்ணாடி வியாபாரத்துல.
பாக்கி : வாக்கு மூலம் குடுக்கும்போது உட்கார முடியாது
ரமனன் : ஏன்?
பாக்கி : அது வாக்கு 'மூலம்' ஆச்சே.
வேலு : "அங்கே என்ன பட்டிமன்றம்?"
விச்சு : "வீரப்பனா? அதிரடிப்படையா? ன்னு தான்.
வேலு : "என்னப்பா சர்வர் மெதுவடைல ஓட்டை இவ்வளவு பெரிசா இருக்கே."
பேட்டை மாமா : "நான்தான் சார் தவறுதலா கால் கட்டை விரலால ஓட்டை போட்டுட்டேன்"
நிருபர் : உங்க பேர்ல ரசிகர் மன்றம், நற்பணி மன்றம்னு வைக்கிறாங்களே, அது பத்தி என்ன நினைக்கிறீங்க?
நடிகை : அதைவிட என்பேர்ல நீதி 'மன்றம்' வச்சா ரொம்ப சந்தோசப்படுவேன்.
நண்பர் 1 : என்ன சார் ஸ்டூல் பாக்கவே வினோதமா இருக்கு.
நண்பர் 2 : இது ஸ்டூல் இல்ல மைசூர்பாகு சரியா வரல்ல. அதனால வீணா போக வேண்டாமேன்னு ஸ்டுலா பண்ணிட்டா யாராவது வந்தா உக்கார வச்சுக்கலாம் பாருங்க.
பாஸ்கி : புதுசா ஒரு சின்ன வீடு செட்டப் பண்ணலாம்னு இருக்கேன்.
ஜோதிடர் : அதுக்கு நான் என்ன பண்ணனும் ?
பாஸ்கி : வாஸ்து சாஸ்திரப்படி வயசு குறிச்சுக் குருத்தீங்கன்னா நல்லா இருக்கும்.
பாஸ்கி : அந்த ஹோட்டல் கோகோ கோலா ஃப்ரீ அப்படீன்னு போட்டிருந்தத பாத்துட்டு ஏமாந்துட்டேன்!
ஏன்?
பாக்கி : ஸ்ட்ராவுக்கு 10 ரூபா சார்ஜ் பண்ணிட்டாங்களே!
அமலா : சண்டை போட்டுட்டு ரொம்ப நாளா பேசாம இருந்த பக்கத்து வீட்டு கங்காவயும், எதிர்த்து வீட்டு காவேரியயும் என் மருமக சமாதானம் பண்ணி பேச வச்சுட்டா.
விமலா : அதுக்கென்ன?
அமலா : கங்கா - காவேரிய இணச்சுட்டதா பெருமையா பேசிக்கிறா.
அமலா : என் மருமக ரொம்ப சோம்பேறி
விமலா : என்ன செய்றா?
அமலா : திடிர்னு சண்டைய நிறுத்திட்டு சமாதானம் ஆயிடுவா.
அமலா : என் மருமகள்களுக்கிடயே கடுமையான போட்டி.
விமலா : எதுக்கு ?
அமலா : என்கூட யார் முதல்ல சண்டை போடுறதுன்னுதான்.
அமலா : என் காதலர் என்ன ஏமாத்திருவாரோன்னு பயமா இருக்கு.
விமலா : ஏன்?
அமலா : பீச்சுக்கு வரும்போதெல்லாம் அல்வா வாங்கிட்டு வர்றாரு.
விமலா : "ரொம்ப நாளா சரியா சாப்பிடாததால கருவாடு மாதிரி ஆயிட்டா"
அமலா : "யாரு?"
விமலா : "மீனா தான்"
அமலா : என் முகத்துல புள்ளிகளா இருக்கு, அதை அழகு படுத்த ஒரு ஐடியா சொல்லு.
விமலா : அந்தப் புள்ளிகள இணைச்சு கோலமா போட்டுரு அருமையா இருக்கும்.
விமலா : என் மாமியார் பொறாமைப் படுறாங்க
அமலா : எதுக்கு ?
விமலா : என் புருசன் கூட மட்டுமே நான் சண்டை போடுறேனாம் அதுக்குத்தான்.
அமலா : என் புருசன் சரியான சினிமாப் பைத்தியம்
விமலா : அதுக்காக இருக்கிற பாத்திரங்கள கேரக்டர்னு சொல்றது அவ்வளவு நல்லா இல்ல.
பஸ் பயனிகள்
(சர்தார்ஜி சிரிப்புகள்)
சர்தார் பெருமையாக தன் நண்பரிடம் சொன்னார்." என் தாத்தா சாகும் போது அமைதியாக எந்த சத்தமும் போடாமல் பஸ்சில் தூக்கத்திலிருக்கும்போது செத்தார். ஆனால் அவர் ஓட்டிக்கொண்டிருந்த பஸ் பயனிகள்தான் அலறிக் கொண்டே செத்தார்கள்"