கருணாவின் முக்கியஸ்தர் மாமா வைத் தேடும் இன்ராபோல்
07 Jun,2011
கருணா குழுவின் முக்கியஸ்தரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாண முக்கியஸ்தராக இருந்து வரும் பி.எல்.ஓ. மாமா எனப்படும் சந்திவெளி மாமா என அனைவராலும் அறியபட்ட வடிவேல் மகேந்திரனை கைது செய்ய உதவுமாறு இன்ரப்போல் பகிரங்கமாக இன்று அறிவித்துள்ளது.
கடந்த பல வருடங்களாக சுவிஸ் நாட்டின் தேடப்படுவோர் பட்டியலில் இருந்து வந்த வடிவேல் மகேந்திரன் தற்போது இன்ரபோல் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளார்.
அண்மையில் கருணாவுடன் இவர் இணைந்திருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியிருந்ததும் கருணா குழுவினர் வடிவேல் மகேந்திரன் தமது கட்சியின் முக்கியஸ்தர் என்று அறிக்கை விட்டிருந்தமையும் குறிப்படத்தக்கது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) முதல் தடவையாக பாராளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் வி.ஜே.மு. லொக்குபண்டார முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டபோது கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் எனும் பிள்ளையான், மட்டக்களப்பு மாநகரசபை மேயர் திருமதி சிவகீதா பிரபாகரன் எனும் பத்மினி ஆகியோருடன் பீ.எல்.ஓ. மாமா என்கிற வடிவேல் மகேந்திரனும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடதக்கது