(படங்கள் இணைப்பு)
ஜப்பானில் உருவாக்கப் பட்டுள்ள இந்த செயற்கை கடற்கரை மிகவும் அழகாக உள்ளது. பார்ப்பதற்கு இயற்கையான கடற்கரைப் போலவே காட்சியளிக்கிறது. நீங்களும் பார்த்து மகிழுங்கள்.
செயற்கை கடற்கரையில் குளிக்கலாம் வாங்க
சுட்டெரிக்கும் வெயிலில், சுனாமி கிளப்பும் மெரீனாவில் இப்போதெல்லாம் குளிக்க வேண்டுமானால் மனசுக்குள்ளே கிலுகிலுப்புதான். அதே சமயம் உடலை உறைய வைக்கும் அண்டார்டிகா கடலில் தாவி குதிக்க முடியுமா என்ன. ஆனால், ஜப்பானுக்கு போனீங்கனா சூடும் இல்லாம, குளிரும் இல்லாம சும்மா கும்முன்னு ஒரு குளிலைப் போட்டுட்டு வரலாம்.
உலகில் முதல் முறையாக (உள்ளரங்கம் போல்) இண்டோர் கடற்கரையை நிர்மாணிச்சிருக்காங்க.ஜப்பானி்ன் தென்கோடியில் உள்ளது கியூஷூ தீவு.அங்கே மியாசாகி என்ற இடத்தில்தான் இந்த இண்டோர் கடற்கரையை டோம் கடலை ஒட்டி உருவாக்கி இருக்கிறார்கள்.இது ஜப்பான் தலைநகரமான டோக்கியோவில் இருந்து 1,200கி.மீ., தூரத்தில் இருக்கிறது.
இந்தக் கடற்கரையில் அலையை உருவாக்கும் கடல் எப்போதும், கண்ணைப் பறிக்கும் நீல வண்ணத்தில், உப்பற்று இருக்கிறது. குறிப்பிட்ட கணத்தில் அலைகள் அடித்தபடியே உள்ளது. சூடற்ற, குளிரற்ற இக்கடலில் சுறாக்களும் கிடையாது. எல்லாத்தையும் ஓரம் கட்டி வச்சுட்டு ஒரு முங்கு முங்கலாம்.
இந்தக் கடலில் குறிப்பிட்ட மணித்துளிகளில் அங்காங்கே எரிமலை குமுறி, செயற்கை நெருப்பை உமிழும். ஆனால் அது சுடாது. இங்கே இரவு, பகலும் கிடையாது.எப்போது வேண்டுமானால் இங்கே குளிக்கலாம். கடலலை மீது சவாரி (surfing) செய்யலாம்.மழை வந்து நம்மை வீட்டுக்கு விரட்டி அடிக்குமோ, சூரியன் சுட்டு கொப்புளம் கிளம்புமோன்னலாம் பயப்பட வேண்டாம். உங்கள் தலைகு மேல், அந்தரத்தில் உடைக்க முடியாத கூரை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பிரமாண்ட செயற்கை கடற்கரை 300மீட்டர் நீளமும், 100 மீட்டர் அகலமும் கொண்டது.அதன் நீளமான கடற்கரை பகுதியை மார்பில் கற்கள் அழகுப்படுத்துகின்றன. இதற்காக 600 டன் மார்பிள் கற்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அருகில் உள்ள உப்புமாக்கடலில்(Ocean Dome) இருந்து உப்பை வடிகட்டி, சுமார் 13,500 டன் தண்ணீர் இந்த செயற்கை கடற்கரைக்கு அனுப்பப்படுகிறது.
உலகின் பெரிய செயற்கை கடற்கரை என்ற பெயரோடு உள்ளரங்க கடற்கரை என்ற பெயரையும் ர்த்துக்கொண்டிருக்கும் இக்கடலில் செயற்கையாக உலவும் மீன்களுக்கும், கடல் ஜீவராசிகளுக்கும் பஞ்சமில்லை.
ஆனால் இத்தனை சுகத்தையும் அடைய வேண்டுமானால் கொஞ்சம் தாராளமாக பாக்கெட்டில் இருந்து எடுத்துக் கொடுக்க வேண்டியிருக்கும். அதிகமில்லைஸ தனி மனிதருக்கு 2500 ரூபாய்.சவாரிகளும் வேண்டுமானால் கூடுதலாக ஒரு 500ரூ . அப்புறம் குறிப்பிட்ட நேரம் தாண்டி கூடுதலாக தங்க 500ரூ. கூடுதல். இவ்வளவுதான்.
என்ன, இந்த விடுமுறைக்குப் போயிட்டு வர்றீங்களா குடும்பத்தோட!