திருகோணமலை பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த பிரமோற்சவம் !
13 Mar,2023
தெட்ஷணகைலாசம் என்னும் திருகோணமலையில் அருளாட்சி புரியும் அருள் மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த பிரமோற்சவம் எதிர்வரும் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து திருவிழா நடைபெறும்.
04-04-2023 செவ்வாய்க்கிழமை காலை 8.00 மணிக்கு இரதோற்சவம் இடம் பெற்று 05 -04-2023 புதன்கிழமை உதயத்தில் அம்பாள் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி திருகோணமலை சழுத்திரக்கரையில் தீர்த்தோற்சவம் நடைபெறும்.
27-03-2023 முதல் 03-04-2023 வரை தினழும் அம்பாளுக்கு காலை 5.30 மணிக்கு அபிஷேகம், காலை 7.00 மணிக்கு மூலஸ்தான பூஜை, 7.45 க்கு தம்பபூஜை, 8.30 மணிக்கு வசந்த மண்டபபூஜை, 10.00 மணிக்கு திருவிழா நடைபெறும், பிற்பகல் 2.30 மணிக்கு அபிஷேகம், 3.30 மணிக்கு மூலஸ்தான பூஜை, மாலை 4.15 மணிக்கு தம்பபூஜை, மாலை 5.00 மணிக்கு வசந்த மண்டப பூஜை, 6.00 மணிக்கு திருவிழா 7.30 மணிக்கு நிறைவு பெறும்.
03-04-2023 திங்கட்கிழமை 09 ஆம்திருவிழா அன்று அம்பாள் மாலை 6.00 மணிக்கு சப்பறத்தில் பவனிவருதல் நடைபெறும்.
திருவிழாக்காலங்களில் பகல் திருவிழா முடிந்தவுடன் மகேஸ்வர பூஜை என்று சொல்லப்படும் அன்னதானம் வழங்கப்படும்.
உற்சவகாலங்களில் ஆலய வீதியில் பக்தர்கள் காற்சட்டை, பாதணிகளுடன் நடமாட வேண்டாமெனவும் சைவசமய கொட்பாடுகளை பின்பற்றுமாறும் பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான பிரதம குருவும் ஆதினகர்த்தாவுமான பிரம்ம ஸ்ரீ சோ. இரவிச்சந்திரக் குருக்கள் கேட்டுக் கொள்கின்றார்.