உயர்கிறது மனிதனின் ஆயுட்காலம்.. நீண்ட காலம் வாழ இதை பண்ணுங்க.. ஆய்வில் முக்கிய தகவல்..!
26 Feb,2023
ஒரு மனிதனின் ஆயுட்காலம் என்பது அவனுடைய ஆரோக்கியமான வாழ்க்கை சூழலும், அவனது வாழும் முறையையும் அடிப்படையாக கொண்டதே. அதுபோன்ற சூழலை கொண்ட பகுதிகளில் வசிப்போர் முதுமையை கடந்தும் நீண்ட நாட்கள் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். உலகில் இப்போது ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையை விட 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிகம் என்கிறது ஆய்வு முடிவு. ஆனால் இந்த நிலை உலகின் எல்லா நாடுகளிலும் ஒரே போன்று இல்லை.
பெருந்தொற்று மற்றும் உலகப் போர்களை விட்டுவிட்டால், இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக உலகம் முழுவதும் மனிதனின் சராசரி வயது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. போதிய மருத்துவ கட்டமைப்பு , தூய்மை மற்றும் உணவு ஆகியவை நீண்ட ஆயுளுக்கு முக்கிய காரணிகளாக பார்க்கப்படுகினறன.
உலக அளவில் நீண்ட ஆயுளை கொண்ட மக்கள் வசிக்கும் நான்கு இடங்களின் பட்டியலும் வெளியாகி ஆச்சயர்த்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. இந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் மனிதர்களின் சராசரி வயது 77 ஆக அதிகரிக்கலாம் என ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிட்டுள்ளது. ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் மொனாக்கோவில் மனிதர்களின் சராசரி வயது 87 ஆக இருக்கும் போது, ஆப்பிரிக்காவின் ஏழை நாடான சாட் குடியரசின் சராசரி வயது 53 ஆண்டுகள் மட்டுமே உள்ளது.
இந்தப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் சீனாவின் ஹாங்காங்கும், மக்காவ் மூன்றாவது இடத்திலும், ஜப்பான் நான்காவது இடத்திலும் உள்ளன. உலக வல்லரசுகளில் ஜப்பானில் மட்டுமே மனிதர்களின் சராசரி வயது அதிகமாக உள்ளது. தெற்கு ஜப்பானில் உள்ள ஒகினாவாவில், மக்கள் 90 வயது வரை சுறுசுறுப்பாக இருக்கிறார்கள்.