காதலியின் முன் காதலனை வெட்டிக் கொலை ஸ
02 Feb,2023
இந்தியாவின் சென்னையில் உள்ள லட்சுமி புரத்தினைச் சேர்ந்தவர் 24 வயதுடைய சுரேஸ் இவர் அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைசெய்து வந்தார். இவர் ஏற்கனவே திருமணமாகி கணவரைப் பிரிந்த தனது முன்னாள் காதலியான ஜானகியுடன் வாழ்ந்து வந்தார். இவர் நேற்று முன்தினம் தனது காதலியுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும்போது திடிரென வழிமறைத்த 04 பேர் கொண்ட கும்பலால் சாரமாரியாக வெட்டியதில் சுரேஸ் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சுரேஸின் உடலை வைத்திய சாலைக்கு அனுப்பியதுடன், குறித்த பெண்னை விசாரித்த நிலையில் திடுக்கிடும் சம்பவம் வெளியானது, அதாவது ஜானகி கடந்த 03 வருடங்களாகச் சுரேஸை காதலித்து வந்த நிலையில், இதனை எதிர்த்த தனது குடும்பம் தனது உறவுக்காரரான குமார் என்பவருக்குக் கடந்த வருடம் திருமணம் செய்து வைத்ததாகவும் பின்னர் கருத்து வேறுபாடுகாரணமாகப் பிரிந்து தனது குழந்தையுடன் சென்று தனது முன்னாள் காதலன் சுரேஸ் உடன் குடும்பம் நடாத்தி வந்ததாகவும் தெரிவித்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர். இதன் காரணமாகச் சுரேஸை தீர்த்துக்கட்ட எண்ணிய குமார் தனது நண்பர்களுடன் இணைந்து சுரேஸை வெட்டிக் கொன்றதாகத் தெரிவித்தனர், தற்போது தலைமறைவாகிய குறித்த கும்பலைத் தனிப்படை அமைத்துத் தேடி வருவதாகவும் தெரிவித்தனர்.