41 ஆண்டுகளின் பின்னர் ஏலத்திற்கு வருகிறது டயானாவின் திருமண கேக்
21 Oct,2022
கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கிலாந்து நாட்டின் இளவரசர் சார்லஸ் மற்றும் டயானா திருமணம் நடந்த நிலையில் இந்த திருமணத்தின் போது வெட்டப்பட்ட கேக் துண்டு தற்போது ஏலம் விடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கேக்கை அந்த திருமணத்தில் கலந்து கொண்ட ஒருவர் பாதுகாத்து வைத்திருந்தார் என்பதும் இந்த கேக் துண்டு தான் தற்போது ஏலம் விடப் போவதாகவும் கூறப்படுகிறது.
இந்த திருமணத்தில் கலந்து கொண்ட இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த நைஜல் என்பவர் கடந்த ஆண்டு காலமானார். அவர் இந்த திருமணத்தில் கலந்து கொண்டபோது அவருக்கு வழங்கப்பட்ட கேக்கை பாதுகாப்பாக கடந்த 41 ஆண்டுகள் வைத்திருந்தார்.
அவரது இறப்பிற்கு பின் தற்போது இந்த கேக் துண்டை ஏலம் விடப் போவதாக செய்தி வெளியாகியுள்ளது.
இந்த கேக் 300 இங்கிலாந்து பவுண்டுகள் மதிப்பு என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த துண்டு இலட்சக்கணக்கில் ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.