நேர்மறை எண்ணங்களை கொடுப்பதற்கு எந்த பொருட்களை வீட்டின் படுக்கை அறையில் வைத்திருக்க கூடாது என்பதை வாஸ்து சாஸ்திரம் கூற்றுப்படி நாம் தெரிந்து கொள்வோம். அது என்னென்ன பொருட்கள் தெரிந்து கொள்ளலாம் .
உங்கள் வீட்டில் கணவன் மனைவிக்குள் அன்னோனியம் இல்லை, பணத்தை அதிகமாக சேமிக்க முடியவில்லை, தேவைக்கு ஏற்ப பணம் வருவது குறைவு, குழந்தைகள் தங்கள் சொல் பேச்சைக் கேட்பதில்லை, வீட்டில் இருப்பவர்களுக்கு உடல்நல கோளாறு, இதுபோன்று ஏதேனும் பிரச்சினைகள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தால், முதலில் இந்தத் தவறுகளை நீங்கள் செய்திருக்கிறீர்களா என்று சரி பார்த்துக் கொள்ளுங்கள்.
ஆம், ஒரு வீட்டில் பூஜையறை, சமையலறை, எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியம் படுக்கையறை. அந்த படுக்கை அறையில் சில பொருட்களை நாம் வீட்டில் வைத்திருக்கும் போது, அது நமக்கு மகாலட்சுமி யோகத்தை கொண்டு வந்து சேர்க்கும். அதேபோன்று, சில பொருட்களை வீட்டில் வைத்திருப்பது நமக்கு, பண கஷ்டம் வர வாய்ப்பு உள்ளது. எனவே, உங்களுக்கு பண கஷ்டம் வராமல், நேர்மறை எண்ணங்களை கொடுப்பதற்கு எந்த பொருட்களை வீட்டில் வைத்திருக்க கூடாது என்பதை வாஸ்து சாஸ்திரம் கூற்றுப்படி நாம் தெரிந்து கொள்வோம். அது என்னென்ன பொருட்கள் தெரிந்து கொள்ளலாம் .
முதலில் வாடகை வீடாக இருந்தாலும் சரி, சொந்த டாக இருந்தாலும் சரி, படுக்கையறை ஆனது தென்மேற்கு திசையில் தான் இருக்க வேண்டும். இதை நீங்கள்சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
கடிகாரம்:
முதலில் படுக்கை அறையில் இருக்கவே கூடாது ஒரு முக்கியமான பொருள் கடிகாரம். இதுவும் படுக்கை அறையில் இருக்கக் கூடாது. இதனால் நிறைய கடன் பிரச்சினைகளும், குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் ஏற்படும். எனவே, கை கடிகாரமாக இருந்தாலும் சரி, அதனை அப்புற படுத்துவது சிறந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.
கண்ணாடி:
இரண்டாவது கண்ணாடி. இந்த கண்ணாடி படுக்கையறையில் இருக்கும் போது நமக்கு எப்போதுமே மூன்றாவது ஒரு நபர், நமக்கு இடையில் இருப்பதைப் போன்று உணர்வு இருக்கும். இது வீட்டிற்கு அவ்வளவு நல்லதல்ல.இவை வீட்டில் எதிர்மறை ஆற்றல் பெருகும். வருமானத்தில் தடையும், சிக்கல்களும் வந்து கொண்டே இருக்கும்.
மீன் தொட்டி:
மீன் தொட்டிகள் ஏப்போதும் படுக்கையறையில் வைக்கக்கூடாது. இதை முடிந்த அளவிற்கு உங்கள் வீட்டின் வரவேற்பறையில் வைத்து விடுங்கள். ஏன் என்றால் இதை அனைவரும் பார்க்கும் இடத்தில்தான் வைக்க இருக்க வேண்டும். உங்கள் படுக்கையறையில் வைத்தால் தீராத கஷ்டம் வந்து சேரும்.
அதே போல படுக்கையறையில் தெய்வங்களின் படங்களோ, இறந்தவர்களின் படங்களோ, கண்டிப்பாக இருக்கக் கூடாது. இதனால் அறை முழுவதும் எதிர்மறை ஆற்றல் சூழ்ந்து கொள்ளும்.
பொதுவாக இரும்பு சார்ந்த எந்த பொருளையும், படுக்கை அறையில் வைக்கக்கூடாது. இதனால், வீட்டில் பல்வேறு பிரச்சனைகள், பண கஷ்டம் ஏற்படும். அதை தூக்கியாவது போட்டு விட வேண்டும். எனவே, இரும்பு பொருட்கள் துருப்பிடிக்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.
:
அதே போன்று கணினி, டிவி இவை இரண்டும் உங்கள் படுக்கை அறையில் வைக்க கூடாது. இதனிலிருந்து வெளிவரும் ஒளி காற்றானது, அந்த படுக்கை அறையில் உள்ள நேர்மறை ஆற்றலை முற்றிலும் குறைத்து விடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.