எமது மூதாதையர்கள் 7M மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே 2 கால்களில் எழுந்து நடக்க ஆரம்பித்து விட்டார்கள் !
25 Aug,2022
மனிதர்களின் முன்னோடி என்று அழைக்கப்படும் Sahelanthropus tchadensis ஒரு குரங்கு இனம் உள்ளது. இது முழுமையாக குரங்கு இனமும் அல்ல. முழுமையாக மனித குலமும் அல்ல. இரண்டிற்க்கும் நடுப்பட்டதாக இருந்தது. இதில் இருந்து பரிணாம வளர்ச்சி அடைந்தே மனித இனம் தோன்றியது என்று, விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். ஆனால் இந்த வகை குரங்குகள், சுமார் 7 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே 2 கால்களில் எழுந்து நின்று நடக்க வல்ல ஆற்றலை பெற்றிருந்தது என்று தற்போது தான் விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளார்கள். 2001ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டு ஆய்வாளர் ஒருவரால் கண்டு பிடிக்கப்பட்ட 7 மில்லியன் ஆண்டுகள் பழமையான எலும்புகளை வைத்து ஆராய்ந்தவேளை இதனை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.