நிர்வாணமாக பெண்ணை சாலையோரம் வீசிய இளைஞர்கள்-
08 Aug,2022
ரத்தப் போக்கு அதிகமானதும் அந்த பெண்ணை நிர்வாண நிலையில் சாலையோரம் வீசி விட்டு ஓடி இருக்கிறார்கள் அந்த இளைஞர்கள். இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்ததை அடுத்து முதல்வர் அதிரடி உத்தரவு போட்டிருக்கிறார். சிறப்பு புலனாய்வு குழு விரைந்து நடவடிக்கை எடுத்து இரண்டு பேரை கைது செய்திருக்கிறது. மேலும் ஒருவரை பிடிக்க தேடி வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் பண்டார மாவட்டம். அம் மாவட்டத்தில் வசித்துவந்த 35 வயது பெண் ஒருவர் கடந்த ஜூலை 30 ஆம் தேதி அன்று இரவில் தனது சகோதரியிடம் சண்டை போட்டுக் கொண்டு கிராமத்தில் இருக்கும் தனது சகோதரன் வீட்டுக்கு சென்றிருக்கிறார். அப்போது நடந்து சென்ற அந்த பெண்ணிடம் அந்த வழியாக வந்த ஸ்ரீ ராம் என்கிற இளைஞர் அந்தப் பெண்ணை சகோதரன் வீட்டுக்கு அழைத்துச் சென்று விடுவதாக சொல்லி இருக்கிறார்.
இரவு நேரம் என்பதால் அந்த பெண்ணும் அவருடன் சென்று இருக்கிறார் . ஆனால் அந்த இளைஞரோ கமர்கான் கிராமத்திற்கு அந்த பெண்ணை அழைத்துச் செல்லாமல் பலாஸ்கான் பகுதிக்கு அழைத்துச் சென்று அங்கிருக்கும் பழைய வீட்டில் அடைத்து வைத்திருக்கிறார். அந்த பெண்ணை ஆகஸ்ட் 1 ஆம் தேதி வரைக்கும் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். அதன் பின்னர் தேசிய நெடுஞ்சாலையில் கொண்டு போய் விட்டுவிட்டு எஸ்கேப் ஆகி இருக்கிறார். உதவிக்கு யாரும் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த அந்த பெண் அங்கிருந்து கனஹால்மோ பகுதிக்கு சென்றிருக்கிறார்.
அப்போது அங்கு வந்த லுக்கா அசோக், ஜார்ஜ் முகம்மது அன்சாரி என்கிற இரண்டு இளைஞர்கள் அந்த பெண்ணுக்கு உதவி செய்வதாக சொல்லி அழைத்துச் சென்றிருக்கிறார்கள். ஆனால் அந்த இளைஞர்களும் அந்த பெண்ணை அடைத்து வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள். இதனால் அந்த பெண்ணுக்கு ரத்தப்போக்கு அதிகரித்து மயங்கி கிடந்திருக்கிறார்.
இதை அடுத்து அந்த பெண்ணை நிர்வாண நிலையிலேயே சாலையோரம் தூக்கி வீசி விட்டு சென்றிருக்கிறார்கள். அப்பகுதியில் உள்ளவர்கள் இதை பார்த்துவிட்டு அந்த பெண்ணுக்கு ஆடை அணிவித்து மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர். அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக நாக்பூரில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு இருக்கிறார். அங்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார் .
போலீசார் வழக்கு பதிவு செய்து இரண்டு இளைஞர்களை கைது செய்துள்ளனர். மேலும் தலைவரைவாக இருக்கும் ஒரு இளைஞரை பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர் . மகாராஷ்டிராவில் இந்த சம்பவம் பூதாகரமாக வெடித்து இருப்பதால் சமூக ஆர்வலர்களும் , பொதுமக்களும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதை அடுத்து முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்திருக்கிறார். குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருக்கிறார்.