துண்டு துண்டாக மூன்று பெண்களின் உடல்கள் – கில்லர் சிக்கினான்
08 Aug,2022
அடுத்தடுத்து துண்டு துண்டாக மூன்று பெண்களின் உடல்கள் மீட்கப்பட்டதால் இது சீரியல் கில்லரின் வேலை தான் என்பதை அறிந்த போலீசார் 9 தனிப்படைகள் அமைத்து இரண்டு மாதங்களாக தீவிர தேடுதல் வேட்டை நடத்தியதில் செல்போன் சிக்னல் மூலம் அந்த சீரியல் கொலையாளியை கைது செய்துள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் கடந்த ஜூன் மாதம் மைசூர் அருகே உள்ள கால்வாயில் 25 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடல் துண்டிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டிருக்கிறது. இதை அடுத்து அந்த இடத்திலிருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அரக்கேரே என்கிற இடத்தில் உள்ள ஒரு கால்வாயில் ஒரு பெண்ணின் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது.
இதை அடுத்து கர்நாடகா மற்றும் பக்கத்து மாநிலங்களில் காணாமல் போயிருக்கு பெண்களின் பட்டியலை வைத்து விசாரணை நடத்தி வந்ததில் காணாமல் போன பெண்கள் 1,116 பேரில் பேரில் ரெண்டு பேரின் உடல்கள்தான் அது என்பது தெரிய வந்திருக்கிறது. இதே போல் மே மாதத்திலும் ஒரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது. இதனால் இது ஒரு சீரியர் கில்லரின் வேலை தான் என்பது போலீசாருக்கு தெரிய வந்திருக்கிறது. இதை அடுத்து 9 தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டையை போலீசார் தீவிரப்படுத்தி இருந்துள்ளார்கள்.
சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட செல்போன் சிக்னல் மூலம் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கிய போதுது குறிப்பிட்ட செல்போனின் சிக்னல் யாருடையது என்பதை விசாரித்த போது அது பெங்களூரைச் சேர்ந்த சித்தலிங்கப்பா என்பது தெரிய வந்திருக்கிறது. பெண்களுடன் அடிக்கடி உல்லாசமாக இருக்கும் பழக்கம் கொண்டவர் சித்தலிங்கப்பா என்பது தெரிய வந்திருக்கிறது.
அவருக்கு சாம்ராஜ்நகரை சேர்ந்த பாலியல் தொழிலாளி சந்திரகலாவுடன் நெருக்கம் ஏற்பட்டிருக்கிறது . பின்னர் அது காதலாக மாறி இருவரும் குடித்தனம் நடத்த ஆரம்பித்திருக்கிறார்கள். அப்போது தான் பாலியல் தொழிலில் தள்ளப்பட்டதற்கு காரணமாக இருந்த பெண்கள் குறித்து சித்தலிங்கப்பாவிடம் கூறியிருக்கிறார். அந்த பெண்களை பழிவாங்க வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார்.
அந்த பெண்களை பழி வாங்குவதற்காக சித்தலிங்கப்பாவிற்கு மைசூரில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்துக் கொடுத்திருக்கிறார் சந்திரகலா. திட்டமிட்டபடி அப்பெண்களையும் சித்தலிங்கப்பாவுக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார் சந்திரகலா. பலமுறை அந்த பெண்களும் அந்த வீட்டிற்கு வந்து சித்தலிங்கப்பாவுடன் உல்லாசம் அனுபவித்து சென்றிருக்கிறார்கள் . அந்த சமயத்தில் தான் மூன்று பெண்களை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி வீசியிருக்கிறார் சித்தலிங்கப்பா. போலீஸ் அவரிடம் நடத்திய விசாரணையில் இந்த அதிர்ச்சி தகவல்கள் கிடைத்திருக்கின்றன.