மனைவியை காணவில்லை என்று புகார் செய்த கணவரை கைது செய்த போலீஸ்
20 Jul,2022
னைவியை காணவில்லை என்று புகார் செய்த கணவரையே போலீஸ் கைது செய்தது. அந்த இளைஞரின் மனைவியை அழைத்துச் சென்று மறு திருமணம் செய்த இரண்டாவது கணவரையும் போலீஸ் கைது செய்தது. சிறுமியை இருவரும் திருமணம் செய்ததால் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் அவர்கள் இதுவரையும் கைது செய்திருக்கின்றனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உப்பாஹள்ளியைச் சேர்ந்த 17 வயது சிறுமி தாயுடன் வசித்து வந்திருக்கிறார். பத்தாம் வகுப்பு வரைக்கும் படித்திருக்கும் அந்த சிறுமியின் தந்தை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இறந்ததால், அதற்கு மேல் படிக்க வசதி இல்லாமல் தாயுடன் வசித்து வந்திருக்கிறார்.
கடந்த 2020 ஆம் ஆண்டில் அதே பகுதியைச் சேர்ந்த விஜய் என்கிற இளைஞர் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக சிறுமியின் தாயிடம் சொல்லி இருக்கிறார். மகளுக்கு தற்போது 16 வயது தான் ஆகிறது. அதனால் 18 வயது ஆனதும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று சொல்லி இருக்கிறார். ஆனால் சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் பேசி அவரை அழைத்துச் சென்று திருப்பூரில் திருமணம் செய்து கொண்டு தனிக்குடித்தனம் நடத்தி இருக்கிறார் விஜய்.
பின்னர் ஊருக்கு திரும்பி உப்பார ஹள்ளியில் வசித்து வந்த தம்பதி இருவருமே கூலி வேலைக்குச் சென்று வந்திருக்கிறார்கள். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் சிறுமியின் தாயார் உடன் பூபதி என்பவர் கூலி வேலை செய்து வந்திருக்கிறார். அவருக்கும் சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. பின்னர் இருவரும் செல்போனில் நீண்ட நேரம் பேசி வந்திருக்கிறார்கள். இவர்களுக்குள் காதல் மலர்ந்திருக்கிறது. இதை தெரிந்துகொண்ட விஜய் கண்டித் திருக்கிறார். அதனால், கடந்த ஜூலை 15ஆம் தேதி அன்று சிறுமியை ஓசூர் அழைத்துச் சென்றிருக்கிறார் பூபதி. அங்கு இருக்கும் முருகன் கோயிலில் சிறுமிக்கு விஜய் கட்டிய தாலியை கழற்றி உண்டியலில் போட்டுவிட்டு புதிய தாலி கட்டி ஓசூரில் நடத்தி வந்திருக்கிறார்.
இது விஜய்க்கு தெரிய வந்ததும் தனது மனைவியை பூபதி என்பவர் கடத்தி திருமணம் செய்து விட்டதாக மாரண்டஹள்ளி போலீசில் புகார் அளித்திருக்கிறார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி பூபதியையும் மனைவியையும் ஓசூரில் இருந்து மாரண்டஹள்ளிக்கு வர வைத்து விசாரணை நடத்தினர். சாரணையில் 18 வயதாகாத சிறுமி என்பது தெரிய வந்ததை அடுத்து விஜய் -பூபதி இருவருமே சிறுமியை திருமணம் செய்து இருப்பதால் அவர்கள் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் மீது வழக்கு பதிவு செய்து இருவரையுமே கைது செய்துள்ளனர் போலீசார்.
மனைவியை காணவில்லை என்று போலீசில் புகார் அளிக்க சென்ற கணவரையே போலீசார் கைது செய்துள்ளது உப்பாஹள்ளி பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.