SLAF-AN Antonov-32: என்ற குறியீடு அடங்கிய ராணுவ விமானத்தில் தப்பி ஓடினார் கோட்டா
13 Jul,2022
இன்று(புதன் கிழமை) அதிகாலை இலங்கை நேரப்படி சுமார் 1 மணி அளவில், இலங்கை வான் படை விமானமான அன்டனோவ் 32 என்ற விமானத்தில் ஏறி கோட்டபாய மாலை தீவு நோக்கிச் சென்றுள்ளார். மாலை தீவு நேரப்படி அதிகாலை 2.50 மணிக்கு இந்த ராணுவ விமானம் மாலே தீவில் தரை இறங்கியுள்ளது என செய்திச் சேவை தெரிவித்துள்ளது. மாலை தீவு அரசு கோட்டபாயவை திருப்பி அனுப்பவில்லை. அப்படி வெளியான செய்தி உண்மையும் அல்ல. மாலே தீவில் இருந்து படகு மூலம் எந்த ஒரு தீவையும் கோட்டபாய அடைய முடியும். காரணம் சுமார் 2,000 தீவுகள் அடங்கிய நாடு தான் மாலை தீவு. அங்கே தனித் தீவு ஒன்றை ராஜபக்ஷர்கள் வாங்கி வைத்திருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி இருந்தது. கோட்டபாய தனது மனைவி மற்றும் ஒரு பாதுகாப்பு அதிகாரியோடு மற்றும் விமானியோடும் மாலை தீவு சென்றுள்ளதாக அறியப்படுகிறது.
இந்தியாவில் இருந்து கோட்டபாயவை அழைத்துக் கொண்டு டுபாய் செல்ல வந்த சாட்டர்(பிரைவேட்) விமானம் கொழும்பில் தரித்து நிற்கிறது. இறுதியாக டுபாய்க்கு செல்ல கோட்டபாய எடுத்த முயற்ச்சி விமான பாதுகாப்பு அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது. ஒரு விமானம் ஒரு நாட்டில் இருந்து புறப்பட வேண்டும் என்றால், அது பறக்க முன்னர் (Air traffic controller) கட்டுப்பாட்டினுள் வர வேண்டும். அவர்களே எத்தனை ஆயிரம் அடி உயரத்தில் பறக்க வேண்டும், எந்த திசையில் பறக்க வேண்டும், எந்த விமானம் முன்னால் வருகிறது என்ற எல்லா விதமான எச்சரிக்கையை கொடுப்பார்கள். ஆனால் இலங்கையின் air traffic controller ஊழியர்கள், கோட்டா பறக்க இருந்த விமானத்திற்கான பாதுகாப்பை கொடுக்க முடியாது என்று கடுமையாக மறுத்து விட்டார்கள். இதனால் மச்சான் வேறு வழி இன்றி மீண்டும் திரும்பிப்போய் ராணுவ முகாமில் முடங்கியுள்ளார்.
கப்பல் ஊடாக இந்தியாவில் உள்ள ஏதாவது ஒரு துறை முகத்திற்கு கோட்டபாய குடும்பத்தை, கொண்டு வந்து விடவா என்று இலங்கை கட்டளை தளபதி இந்திய ராணுவத்திடம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். இதனை இந்திய அரசும் இந்திய ராணுவமும் மறுத்துள்ளது. அமெரிக்காவின் குடி உரிமை பெற்ற கோட்டபாய அதனை கேன்சல் செய்து இருந்தார். அதன் பின்னரே அவர் இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டார். தற்போது அமெரிக்காவுக்கு விசா அப்பிளை செய்து பார்த்துள்ளார். தன்னுடைய மகன் மற்றும் மகளுடன் சென்று வாழ. ஆனால் அமெரிக்காவும் விசிட்டர் விசா கொடுக்க மறுத்து விட்டது. இதனை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் உறுதி செய்துள்ள நிலையில். மாலை தீவும் கோட்டபாயவை ஏற்க்க மறுத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளதால். கோட்டபாய கடல் வழியாக கூட மாலை தீவுக்கு செல்ல முடியாது. டுபாய் மட்டுமே சென்று, பின்னர் அங்கிருந்து வேறு ஒரு நாட்டுக்குச் செல்ல வேண்டும். இல்லையே வெலிகடையில் கழி தான் சாப்பிட வேணும். பார்த்தீர்களா தமிழர்களே ஸ. எத்தனை தமிழ் இளைஞர்களை காரணமே இல்லாமல் வெலிகடையில் போட்டார் கோட்டபாய. ஆனால் இன்று அவரே வெலிகடை செல்ல வேண்டிய நிலை. இது தான் சொல்வது ஆடக் கூடாது என்று. தற்போது திருகோண மலையில் உள்ள கோட்டபாய ரஜபக்ஷ, அங்கிருந்து கடல் படை கப்பல் மூலம் மாலை தீவு அல்லது ஷீ-ஷெல் தீவுக்கு செல்லக் கூடும் என்று கூறப்படுகிறது.