நிலாவெளியில் ஒரே நேரத்தில் 2 பிரான்ஸ் பெண்களை கற்பழிக்க முயன்ற இளைஞர்:
05 Jul,2022
திருகோணமலை-நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேலூர் பகுதியில் வெளிநாட்டு யுவதிகள் இருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் இளைஞரொருவரை கைது செய்துள்ளதாக நிலாவெளி பொலிசார் தெரிவித்தனர். நிலாவெளி- வேலூர் பகுதியில் உள்ள உல்லாச விடுதியில் தங்கியிருந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 28 வயது மற்றும் 31 வயதுடைய யுவதிகள் இருவர் கடற்கரையோரமாக சென்று கொண்டிருந்தபோது உள்வீதியூடாக வந்த இளைஞர் இரு யுவதிகளையும் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக நிலாவெளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அதே பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய சஹ்ரான் எனவும் பொலிசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பாலியல் துஷ்பிரயோக தொடர்பில் இரண்டு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த யுவதிகளையும் சட்ட வைத்திய நிபுணர் அறிக்கையை பெற்றுக் கொள்வதற்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த பொலிஸார்