கணவரின் ஒர்க்ஷாப்பில் வேலைக்கு சேர்ந்தவரை காதலனாக்கிய பெண் -கொலைகாரியான கதை
05 Jul,2022
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே எம்.புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துராமலிங்கம். மின்வாரியத் துறையில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி சுனிதா. இந்நிலையில், நரிக்குடி - திருச்சுழி சாலையில் காரேந்தல் பேருந்து நிறுத்தம் அருகே படுகாயங்களுடன் முத்துராமலிங்கம் இறந்து கிடப்பதாக திருச்சுழி காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலமாக கிடந்த முத்துராமலிங்கத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த திருச்சுழி காவல்துறையினர் முத்துராமலிங்கம் விபத்தில் சிக்கி இறந்தாரா? அல்லது கொலையா? என விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது.
சுனிதாவின் கணவர் முத்துராமலிங்கம் நடத்தி வந்த ஒர்க்ஷாப்பில் வேலை பார்த்த விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே பள்ளிமடத்தைச் சேர்ந்த மலையரசன் ( 22) என்ற இளைஞருடன் ரகசிய தொடர்பில் இருந்ததை கணவர் கண்டித்ததால் கள்ளக்காதலுடன் சேர்ந்து கொலை செய்ய திட்டமிட்டதாக கூறியிருக்கிறார்.
கடந்த 1 ம்தேதி வீட்டிற்கு வந்த கணவனை கள்ளக் காதலன் மலையரசன் மற்றும் புளியங்குளத்தைச் சேர்ந்த அவரது நண்பர் சிவா ஆகியோர் சேர்ந்து இரவு வீட்டிற்கு வெளியில் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த கட்டையால் அடித்து கொலை செய்ததாகக் கூறியிருக்கிறார். பின்னர் விபத்து நடந்தது போன்று நாடகமாடத் தப்பிக்க நினைத்திருக்கிறார்கள்.
முத்துராமலிங்கத்தின் சடலத்தை மலையரசன் மற்றும் சிவா இருவருக்கும் இருசக்கர வாகனத்தில் வைத்து பேருந்து நிறுத்தம் அருகே விபத்து ஏற்பட்டு இறந்ததை போன்று செட்டப் செய்து விட்டு தப்பி சென்றனர். மேலும் டூவீலரில் சென்ற போது
முத்துராமலிங்கம் சடலத்தின் இரு கால் விரல்களும் தரையில் உரசியபடி வந்ததால் கால் கட்டை விரல்கள் முழுமையாகத் தேய்மானம் அடைந்திருந்தது பிரேத பரிசோதனையின் போது போலீசாருக்கு தெரியவந்தது.
இதனை தொடர்ந்து சுனிதா, மலையரசன், அவரது நண்பர் சிவா(21) ஆகிய மூவரையும் திருச்சுழி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்காதலுக்காகக் கணவரை கொலை செய்து விபத்து போல் நாடகமிட திட்டமிட்டிருந்தும் மோப்பநாயும் கால் கட்டை விரல்களும் காட்டிக் கொடுத்ததால் கம்பி எண்ணிக் கொண்டு இருக்கிறார் சுனிதா.