ரஷ்யாவில் இருந்து எண்ணை இறக்குமதியை குறைக்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம்! -
01 Jun,2022
இரஷ்யாவிடம் இருந்து வாங்கும் எண்ணையை பெருமளவில் குறைக்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம் எடுத்துள்ளது. இதற்கு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் பலத்த வரவேற்பளித்துள்ளார்.
நேற்று திங்கட்கிழமை மற்றும் இன்று செவ்வாய்க்கிழமை ஆகிய இரு நாட்கள் Brussels நகரில் இடம்பெற்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் உச்சிமாநாட்டில் இந்த தீர்மானம் எட்டப்பட்டது. இரஷ்யாவிடம் இருந்து ஐரோப்பிய நாடுகள் வாங்கும் எண்ணையில் கிட்டத்தட்ட 90% வீதமானவற்றை தடை செய்ய இந்த மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் உச்சிமாநாட்டில் எட்டப்படும் தீர்மானத்துக்கு காத்திருந்த ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், இந்த முடிவில் தாம் திருப்தியடைந்துள்ளதாக தெரிவித்தார்.
உக்ரைன் இரஷ்ய யுத்தத்தின் இரஷ்யா போர் விதிகளை மீறி செயற்படுகிறது. பொதுமக்கள் மீதும், அவர்களின் குடியிருப்புக்கள் மீதும் ஈவிரக்கமற்ற தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இரஷ்யாவின் இந்த செயலை கண்டித்து பல முறை பல தடைகளையும், கண்டனங்களையும் பிரான்ஸ் விடுத்திருந்தது. இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த ‘எண்ணை இறக்குமதி தடை’ வரவேற்கத்தக்கது என்றபோதும், அதற்குரிய மாற்றுவழி குறித்தும், அதன் சாத்தியக்கூறு குறித்தும் அரசு சிந்திக்கவில்லை என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.