கடனை திருப்பி செலுத்தாததால் தம்பதி கடத்தி அடித்துக்கொலை
25 May,2022
இந்த நிலையில் அரக்கோணம் அடுத்த மில்லன் ஏரிக்கரையில் உள்ள முட்புதரில் இருவரும் கொலை செய்யப்பட்டு அரை நிர்வாண நிலையில் சடலமாக கிடந்திருக்கிறார்கள். அப்பகுதியினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீசார் தம்பதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றனர்.
இப்ப படுகொலைகள் சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
படுகொலை செய்யப்பட்ட ராணி, அரக்கோணம் வன்னியர் சங்கத்தின் முன்னாள் மாநில துணைத்தலைவராக இருந்தவரும், மின்னல் கிராமத்தின் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராகவும் இருந்த மின்னலான் என்பவரின் சகோதரி ஆவார். சகோதரி ராணி மனைவி குறித்து மின்னலான், தங்கையின் குடும்பத்தினர் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தார்கள். கடன் கொடுத்த நிதி நிறுவனத்தினர் அவர்களை தொல்லை செய்து வந்தார்கள். காஞ்சிபுரத்திலிருந்து காரில் அரக்கோணத்திற்கு வந்தவர்கள் சடலமாக மீட்கப்பட்டு இருப்பதாக கூறியிருக்கிறார்.
இச் சம்பவம் அரக்கோணம் , காஞ்சிபுரம் பகுதிகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.