இங்கிலாந்து நோக்கி பயணித்த அகதிகளின் படகு! - 56 பேர் கடற்படையினரால் மீட்பு!!
11 May,2022
பிரான்சின் பா-து-கலே பகுதியில் இருந்து சிறிய படகு ஒன்றின் மூலம் பிரித்தானியா நோக்கி செல்ல முற்பட்ட 56 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர்.
இன்று மே 10, செவ்வாய்க்கிழமை அதிகாலை இந்த மீட்பு பணி இடம்பெற்றதாக கடற்படையினர் தெரிவித்தனர். சிறிய மீன்பிடி படகு ஒன்றில் 56 அகதிகள் கடலில் பிரித்தானியா நோக்கி பயணித்துள்ளனர். அவர்களின் கர்ப்பிணி பெண் ஒருவரும், ஐந்து சிறுவர்களும் இருந்ததகாவும், உயிராபத்தான பயணத்தை அவர்கள் மேற்கொண்டிருந்ததாகவும் தெரிவித்தனர்.
அகதிகளில், எதியோப்பியா, எரிட்டோரியா, ஆஃப்கானிஸ்தான், நைஜீரியா நாடுகளைச் சேர்ந்தவர்கள் இருந்ததாகவும், அனைவரும் மீட்கப்பட்டு Boulogne-sur-mer துறைமுகத்துக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டில் 52,000 அகதிகள் ஆங்கிலக்கால்வாயை கடக்க முற்பட்டுள்ளனர். இது முந்தைய ஆண்டை விட ஐந்து மடங்கு அதிகமாகும்.
இவ்வருடத்தில் பிரான்சில் இருந்து 7,000 அகதிகள் பிரித்தானியாவை கடல்வழியாக சட்டவிரோதமாக பயணித்துள்ளதாகவும் தரவுகள் தெரிவிக்கிறது.