கணவரை கொல்வது எப்படி? புத்தகம் எழுதிய நாவலாசிரியை கைது!
07 Apr,2022
கணவரை கொல்வது எப்படி என்று புத்தகம் எழுதிய நாவலாசிரியை கணவரை கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
அமெரிக்காவை சேர்ந்த நான்சி என்ற பெண் எழுத்தாளர் கடந்த 2017 ஆம் ஆண்டு கணவரை கொல்வது எப்படி என்ற புத்தகத்தை எழுதினார். இந்த புத்தகம் மிகப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
ஆனால் 2018 ஆம் ஆண்டு அவர் தனது கணவரை கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து நான்சி கைது செய்யப்பட்டுள்ளார்
கணவரின் 100 கோடி ரூபாய் இன்சூரன்ஸை பெறுவதற்காக அவர் கொலை செய்தது நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது