குழந்தைக்கு ஏன் வெள்ளி பாத்திரத்தில் உணவு கொடுக்க வேண்டும்.?
21 Mar,2022
இன்றைய பெற்றோர்கள் குழந்தை வளர்ப்பில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். அவர்கள் குழந்தைக்காக பயன்படுத்தும் ஒவ்வொரு பொருட்களும் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து வாங்கிக் குவிக்கிறார்கள். முன்பெல்லாம் 10, 15 குழந்தைகள் இருப்பதால் இதையெல்லாம் கவனிக்க அவர்களுக்கு நேரம்
இருந்ததில்லை. ஆனால் இப்போது ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு என்று வைத்திருப்பதாலோ என்னவோ அவர்களுக்காக நாம் தேர்ந்தெடுக்கும் பொருட்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றோம். அப்படி முக்கியத்துவம் கொடுக்கப்படும் பொருட்களில் குழந்தைகளுக்கு பயன்படுத்தப்படும் பாத்திரங்களும் ஒன்றாகும். குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் பாலாடை முதல் உணவு கொடுக்க பயன்படுத்தும் கிண்ணம், ஸ்பூன், டம்ளர், குழாயில் உறிஞ்சிக் குடிக்கும் டம்ளர் என்று எல்லா வகையான பொருட்களுக்கும் வெள்ளி உலோகத்தை முதல் தேர்வாக தேர்வு செய்கின்றோம்.
வெள்ளி பொருட்களுக்கு பெற்றோர்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்க காரணம் என்ன?
வெள்ளிப் பொருட்களை குழந்தைகளுக்கு பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன? இதனை தெரிந்து கொண்டால் இனி நீங்களும் வெள்ளிப் பொருட்களை தவிர்க்காமல் வாங்கி விடுவீர்கள். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.குழந்தைகளுக்கு பயன்படுத்தும் பாலாடை சில்வரை விட இரும்பில் இருப்பது நன்மை தரும். ஆனால் அதை விட வெள்ளியில் இருப்பது இன்னும் சிறப்பானது. அது போல் குழந்தைகளுக்கு சோறு ஊட்ட பயன்படுத்தும் கிண்ணி முதல் எடுத்து ஊட்டும் ஸ்பூன் வரை வெள்ளியில் இருப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.பலதரப்பட்ட சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு பின் வெள்ளி பொருளாக தயாரிப்பிற்கு வரும் வெள்ளி, உடல் சூட்டை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. அதில் வைக்கப்படும் உணவானது சூடாக இருக்கும் பொழுது எந்த விதமான நச்சுக்களும் உண்டாவதில்லை. மேலும் அதில் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும் என்பதால் வெள்ளியின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. வெள்ளியில் சூடான பொருட்களையும், குளிர்ச்சியான பொருட்களை வைக்கலாம். வெள்ளி இருவேறு வெப்ப நிலையை தாங்கும் தன்மை கொண்டுள்ளதால் சம நிலையை உருவாக்கி அதன் தன்மையில் கூடுதலாக மெருகேறுகிறது