மிக்- 29 போர் விமானங்களை உக்கிரைனுக்கு போலந்து வழங்கவுள்ளது- அமெரிக்கா பச்சைக் கொடி
07 Mar,2022
அதி நவீன மிக் 29 ரக போர் விமானங்களை அவசரமாக போலந்து நாடு உக்கிரைனுக்கு வழங்கவுள்ளது. இதனை அடுத்து தலை நகர் கிவியைப் பிடிக்க வரும் ரஷ்யாவின் டாங்கிகளை உக்கிரைன் தாக்கி அழிக்க முடியும் என்ற நிலை தோன்றியுள்ளது. இதற்கு அமெரிக்கா ஒப்புதல் கொடுத்துள்ள நிலையில். ரஷ்யா கடும் சீற்றம் அடைந்துள்ளது. இவ்வாறு போர் விமானங்களை போலந்து வழங்கினால், இந்தப் போரில் போலந்து நேரடியாக பங்கு பற்றுவதாக கருதப்படும் என்று, புட்டின் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ரஷ்ய உக்கிரைன் யுத்தம் நாம் நினைத்தது போல இல்லாமல் நாளுக்கு நாள் மேலும் மேலும் சிக்கலாகிக் கொண்டு வருகிறது. போலந்து நாடு மீது குரூஸ் ஏவுகணைகளை ரஷ்யா ஏவக் கூடும் என்ற அச்சம் தற்போது எழுந்துள்ளது. அப்படி என்றால் நேட்டோ நாடு ஒன்றின் மீது போர் தொடுக்கும் கட்டமாக அது மாறி விடும். அன் நிலை உருவாகினால் நேட்டோ படைகள் உடனடியாக ரஷ்யாவை தாக்க நேரிடும்ஸ. கொஞ்சம் கொஞ்சமாக ஸ
இந்த போர் இறுக்கம் அடைந்து வருகிறது. தற்போது போலந்து கொடுக்கவுள்ள மிக் 29 ரக போர் விமானங்களை பாவித்து உக்கிரைன் கடும் தாக்குதல்களை மேற்கொள்ளும். அதற்கு தேவையான அதி நவீன ஏவுகணைகளை அமெரிக்கா வழங்கும் என்று எதிர்பார்கப்படுகிறது. இதனூடாக ரஷ்யா தனது வான் எதிர்ப்பு ஏவுகணைகளை உக்கிரைன் நாட்டுக்குள் நகர்த்தும் நிலை தற்போது தோன்றவுள்ளது.
உக்கிரைன் நாட்டில் கிரீமியா பகுதியில் இருந்து புறப்பட்ட ரஷ்யப் படைகள் சற்று முன்னேறியுள்ள நிலையில். 20 மைல் தொலைவில், மேலும் ஒரு அணு உலை உள்ளது. யாஷ்னோக் என்னும் இந்த அணு உலையை உக்கிரைன் படைகள் பாதுகாத்து வருகிறது. இந்த இடம் நோக்கி ரஷ்ய துருப்புகள் நர்ந்து வரும் நிலையில், அங்கே பெரும் போர் வெடிக்கக் கூடும் என்று எதிர்பார்கப்படுகிறது. இதனால் அணு உலை பாதிப்படைந்தால், அணு கதிர் இயக்க துகள்கள் காற்றில் கலக்கும் அபாயம் உள்ளது. இது முழு, ஐரோப்பாவையும் பாதிக்கும் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. இன்று அல்லது நாளை குறித்த இடத்தில் பெரும் யுத்தம் வெடிக்க வாய்ப்புகள் இருக்கிறது.