மிக விரைவில் சூரிய பகவான் இந்த 4 ராசிக்காரர்களுக்கு அளவில்லா அதிர்ஷ்டத்தை தருவார்
06 Feb,2022
கிரகங்களின் அரசனான சூரிய பகவான், தனது மகனான சனியின் ராசியான கும்பத்தில் விரைவில் பிரவேசிக்க உள்ளார். ஜோதிட சாஸ்திரப்படி பிப்ரவரி 13ம் தேதி சூரிய பகவான் மகர ராசிக்குள் நுழைவார்.
மிக விரைவில் சூரிய பகவான் இந்த 4 ராசிக்காரர்களுக்கு அளவில்லா அதிர்ஷ்டத்தை தருவார்
புதுடெல்லி: கிரகங்களின் ராஜாவான சூரியபகவான், தனது மகன் சனியின் ராசியான கும்பத்தில் விரைவில் பிரவேசிக்க உள்ளார். ஜோதிட சாஸ்திரப்படி பிப்ரவரி 13ம் தேதி சூரிய பகவான் மகர ராசிக்குள் நுழைவார். மார்ச் 15 வரை சூரிய பகவான் மகர ராசியில் இருப்பார். உண்மையில், சூரிய பகவானின் இந்த ராசி மாற்றத்தின் பலன் அனைத்து ராசிகளிலும் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கும். ஆனால் 4 ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய பொருளாதார பலன்கள் இருக்கும். இந்த ராசிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
துலாம்: இந்த ராசிக்காரர்களுக்கு (Zodiac Sign) சூரியனின் சஞ்சாரம் சாதகமாக இருக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். இத்துடன் தொழில் முன்னேற்றத்திற்கான வாய்ப்பும் அமையும். குடும்பத்தில் இருந்து நிதி உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் புதிய பதவியை அடையலாம்.
விருச்சிகம்: உத்தியோகத்தில் வருமானம் கூடும். பணியிடத்தில் கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். வியாபாரத்தில் நிதி நிலை வலுவாக இருக்கும். திடீர் பணவரவு உண்டாகும். மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் பெறுவீர்கள்.
தனுசு: சூரியப் பெயர்ச்சியின் போது தொழில் பக்கம் வலுவாக இருக்கும். தொழில் சார்ந்த பயணங்களால் பண பலன்கள் உண்டாகும். இது தவிர சமூக கௌரவம் அதிகரிக்கும். சட்டப் பணிகளில் வெற்றி பெறுவீர்கள். சொத்து சம்பந்தமான வேலைகளில் லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் சாதகமான மாற்றம் ஏற்படும்.
கும்பம்: சூரியனின் சஞ்சாரம் கும்ப ராசியினருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த நேரத்தில், அதிர்ஷ்டம் முழு ஆதரவைப் பெறுவீர்கள். எல்லாத் துறைகளிலும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இத்துடன் நிதிப் பலன்களும் கிடைக்கும்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)