ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட இருவருக்கு தூக்கு
02 Feb,2022
ஈரானில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட இரு ஆண்கள் துாக்கில் போடப்பட்டதாக மனித உரிமைகள் குழு தெரிவித்து உள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரானில் ஓரினச்சேர்க்கை திருநங்கையருடனான உறவு விபசாரம் உள்ளிட்டவை பெரும் குற்றங்களாக கருதப்படுகின்றன. இவற்றில்ஈடுபடுவோருக்கு அந்நாட்டு அரசு மரண தண்டனை விதிக்கிறது.இதன்படி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட மெஹர்தாத் கரீம்பூர் மற்றும் பரித் முகமதி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மரண தண்டனை விதிக்கப்பட்ட இருவரும் ஆறு ஆண்டுகள் சிறையில் இருந்தனர்.
இந்நிலையில் மராகேவில் உள்ள சிறையில் சமீபத்தில் இருவரும் துாக்கில் போடப்பட்டதாக மனித உரிமைகள் குழு கூறி உள்ளது. இதே குற்றச்சாட்டில் சிக்கிய இருவர் கடந்த ஆண்டு ஜூலையில் மராகே சிறையில் துாக்கிலிடப்பட்டனர்.