பிரான்சில்180.000 தொற்று!! 290 சாவுகள்!!
28 Dec,2021
!
இன்று பிரான்சில் கொரோனாத் தொற்றினால் தொடர்ந்து அதிகரித்து 290 பேர் சாவடைந்துள்ளனர். இதனுடன் பிரான்சில் மொத்தமாக 123.188 பேர் கொரோனாவினால் சாவடைந்துள்ளனர்.
இதில் 96.107 பேர் வைத்தியசாலைகளிலும், 27.081 பேர் சமூக மற்றும் முதியோர் இல்லங்களில் சாவடைந்துள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்திற்குள், தொடர்ந்து அதிகரித்துச் சென்று 179.807 பேரிற்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாத் தொற்று ஆரம்பித்ததில் இருந்து, ஒன்பது மில்லியனைத் தாண்டி 9.326.258 பேரிற்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வைத்தியசாலைகளில் 17.405 கொரோனாத் தொற்றினால் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3.416 பேர் உயிராபத்தான நிலையில் தீவிரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது அன்றாடம் பெருமளவில் அதிகரித்துச் செல்கின்றது.
வைத்தியசாலைகளின் அழுத்தம் 67.5 சதவீதமாக உச்சமடைந்துள்ளது.