எளிமையாக நடந்தது நோபல் பரிசளிப்பு விழா
07 Dec,2021
கொரோனா பரவல் காரணமாக நோபல் பரிசளிப்பு விழா இந்த ஆண்டும் எளிமையான முறையில் நடந்து முடிந்தது.
ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய ஆறு துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அந்த வகையில் 2021ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள், ஐரோப்பிய நாடான ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமிலும், அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயின் ஓஸ்லோ நகரிலும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன.
இதன் பரிசளிப்பு விழாவும் ஸ்டாக்ஹோம் மற்றும் ஓஸ்லோ நகரங்களில் விமரிசையாக நடப்பது வழக்கம். கொரோனா தொற்று பரவல் காரணமாக நோபல் பரிசளிப்பு விழா, பரிசு பெற்றவர்களின் நாட்டிலேயே கடந்த ஆண்டு நடந்தது. இந்த ஆண்டும் பரிசு வென்றவர்களின் நாடுகளிலேயே எளிமையான முறையில் பரிசளிப்பு விழா நேற்று நடந்தது. அமைதிக்கான நோபல் பரிசளிப்பு விழா, வரும் 10ம் தேதி நார்வேயின் ஓஸ்லோ நகரில் நடக்க உள்ளது.