சில நாட்களுக்கு முன், இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு பெண் தான் பிறப்பதற்கு மருத்துவர் ஏன் அனுமதித்தார் என்று தன் தாய்க்கு பிரசவம் பார்த்த மருத்துவர் மீது ஒரு வழக்கை பதிவு செய்திருந்தார். இந்த செய்தி உலகம் முழுவதும் வைரலாக பரவியது. தற்போது விசாரணைக்கு வந்த அந்த வழக்கு, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சாதகமாக தீர்ப்பாகி உள்ளது.
இங்கிலாந்தில் உள்ள லின்கன்ஷையர் என்ற இடத்தைச் சேர்ந்தவர் ஈவி என்ற பெண். இவர் வயது 20. இவர், தான் பிறந்து இருக்கவே கூடாது தனக்கு, எப்படி தான் பிறப்பதற்கு என்ற அடிப்படையில் தன் தாயின் மருத்துவர் மீது இவர் வழக்கு தொடர்ந்தார். இதற்கான காரணம், இவருக்கு இருக்கும் தண்டுவடக் குறைபாடு.
ஈவி, பிறக்கும் போதே, ஸ்பைனா பிஃபிடா என்ற முதுகுத்தண்டுவட குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர். இருபத்தி நான்கு மணி நேரமும் இவருடைய உடல் டியூபுகளுடன் இணைக்கப்பட்டிருக்கிறது மருத்துவ உதவி இல்லாமல் இவரால், மற்றவர்களின் உதவி இல்லாமல் வாழமுடியாது. ஸ்பைனா பிஃபிடா என்ற தண்டு வட பாதிப்பு இருந்தால், தண்டு வடம் முழுமையாக உருவாகாமல் இருக்கும், தண்டு வடம் வளைந்து இருக்கும், தண்டுவடம் சீர்குலைந்து காணப்படும் அல்லது இடைவெளிகளுடன் இருக்கும்.
இதனால், ஒருவர் உட்காரவோ, நடக்கவோ, நிற்கவோ முடியாது. பாதிப்பு தீவிரமாக இருந்தால், வாழ்நாள் முழுவதும் படுக்கையிலேயே இருக்க வேண்டும். இத்தகைய தண்டுவட பாதிப்புடன் ஈவி பிறந்ததுக்கு காரணம், ஈவியின் தாய் போலிக் ஆசிட் மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற சரியான மருத்துவ ஆலோசனை வழங்கப்படாதது என்று ஈவி தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில், ஈவி, தன்னுடைய தாயின் மருத்துவரான டாக்டர் பிலிப் என்று மீது வழக்கு தொடுத்திருந்தார்.
ஈவி அம்மா ஃபோலிக் ஆசிட் சப்ளிமெண்ட்களை முழுமையாக எடுத்திருக்க வேண்டும். எடுத்திருந்தால் இவருக்கு தண்டுவட குறைபாடோடு பிறந்திருக்க மாட்டார் அல்லது குழந்தை பிறப்பை தள்ளி போட்டிருப்பார். இதனால் ஈவி பிறந்திருக்க மாட்டார். எனவே, சரியான ஆலோசனையை மருத்துவர் வழங்க தவறிவிட்டதால் ஈவி இப்படியொரு மோசமான வாழ்க்கையை வாழ்ந்து வருவதாக அவரின் வழக்கறிஞரின் வழியே தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு லண்டன் ஹைகோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. மேலும் ஈவியின் வழக்கறிஞர்கள், அவரின் பெற்றோர்கள் சப்ளிமென்ட் எடுத்துக் கொண்டதால் குழந்தை பெற்றுக் கொள்வதை தாமதப்படுத்தி வந்தனர். ஆனால் மருத்துவரின் ஆலோசனையின்படி அவர்கள் உடனடியாக குழந்தை பெற்றுக் கொள்ள முடிவு செய்தனர். ஒருவேளை மருத்துவர் சரியான ஆலோசனை வழங்கியிருந்தால், அவர்கள் காத்திருந்து போலிக் ஆசிட் சிகிச்சையை முழுமையாக பெற்று ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்கலாம் என்று நீதிமன்றத்தில் வாதாடினார்.
இதில் மருத்துவரின் சரியான ஆலோசனை வழங்கப்படாமல் ஈவியின் தாய் போதிய ஊட்டச்சத்து சப்ளிமென்ட்களை எடுத்துக் கொள்ள தவறியதால் தான், இப்படி ஒரு பாதிப்போடு ஈவி பிறந்து அவதிப்பட்டு வருகிறார் என்பதை நீதிபதி உறுதி செய்து உள்ளார். அதற்கு ஈடாக மிகப்பெரிய தொகையை ஈடாக வழங்க வேண்டும் என்று இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
எவ்வளவு தொகையை நஷ்ட ஈடாக வழங்க கூறியுள்ளார் என்பது பற்றிய அதிகாரப்பூர்வமான தகவல் இதுவரை வெளியாகவில்லை ஆனால் நஷ்டஈடு தொகை ஈவிக்கு வாழ்நாள் முழுவதுக்கும் தேவைப்படும் மருத்துவம் மற்றும் பிற தேவைகளை பூர்த்தி செய்யும் அளவுக்கு இருக்கக்கூடும் என்று ஈவியின் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.