தந்தையை அடித்துக்கொன்ற மகன் திருவள்ளூர் அருகே..!
23 Nov,2021
திருவள்ளூர் மாவட்டம் வெங்கத்தூரை அடுத்த கண்ணியம்மா நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவருக்கு வயது 51. கூலி வேலை செய்து வரும் இவர், மனைவி மகேஸ்வரி மற்றும் மகன் பாண்டியன் ஆகியோருடன் வசித்து வருகிறார். 21 வயதாகும் மகன் பாண்டியன் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று சொல்லப்படுகிறது. இதற்கு அவ்வப்போது மருவத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை பெற்று வந்தனர் .ஆனால் பலதரப்பட்ட மருத்துவம் பார்த்தும் இன்னும் குணமாகவில்லை என்று உறுவினர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பாண்டியனின் தாய் மகேஸ்வரியை, தகராறில் பயங்கரமாக தாக்கியுள்ளார். இதனால் காயமடைந்த அவர், திருநின்றவூரில் உறவினர் வீட்டில் சிகிச்சை பெற்று வசித்து வருகிறார்.
தந்தை பாலகிருஷ்ணன் மட்டும் தன் மகனை கவனித்து அவருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.அப்போது மகன் பாண்டியன் மெழுகுவர்த்தி கொண்டு வர சொல்லி கேட்டுயுள்ளார். ஆனால் இருட்டில் மெழுகுவர்த்தி தேடிபிடித்து எடுத்து வருவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆனால் மீண்டும் மீண்டும் தனது தந்தையை கூப்பிட்டு கொண்டே இருந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மகன் தனது தந்தையுடன் தகராறில் ஈடுப்பட்டுள்ளார். ஒரு கட்டத்தில் தகராறு முற்றவே, பக்கத்தில் இருந்த உருட்டுகட்டையை எடுத்து ,தந்தையின் தலையில் ஓங்கி சரமாரியாக அடித்துள்ளார். இதில் படுகாயமடைந்த பாலகிருஷ்ணன் ரத்த வெள்ளத்தில் துடிதுடிக்க சம்பவ இடத்திலே உயிரிழந்தார். பின்னர், பைத்தியம் பிடித்து போல் பயங்கரமாக கத்தியுள்ளார். இதனால் அச்சமடைந்த அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்த போது, இறந்த நிலையில் கிடந்த பாலகிருஷ்ணனை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதனையடுத்து மணவாளநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த திருவள்ளுர் துணை காவல் கண்காணிப்பாளர் , மணவாள நகர் காவல் ஆய்வாளர் ஆகியோர் இறந்த பாலகிருஷ்ணன் உடலை மீட்பு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் வழக்குபதிவு செய்து, தந்தையை உருட்டுகட்டையால் அடித்து கொலை செய்த மகனை கைது செய்து காவல்நிலையம் அழைத்து சென்றனர்.